Saturday, August 8, 2009

மனிதரில் இத்தனை வகையா!?

மனிதர்கள் பலவிதம்..ஒருவர் போல ஒருவர் இருப்பதில்லை.சிலர் பேசிக்கொண்டே இருப்பார்கள்.சிலர்..தேர்ந்தெடுத்து சொற்களை வெளியிடுவார்கள்.ஒரு சிலரோ...வாயைத் திறந்தாலே..முத்து உதிர்ந்துவிடும் போல எண்ணி வாயைத் திறக்க மாட்டார்கள்.

என் நண்பர் ஒருவர்..பெயர் வேண்டாமே..எதிலும் குறை சொல்பவராகவே இருப்பார்.நண்பர்கள் பற்றியோ..அரசியல் பற்றியோ பேசும் போது..எளிதில் உணர்ச்சி வசப்பட்டு..கடுமையாக தாக்கிப் பேசுவார்.இதனால்..நண்பர்கள் இவரை விட்டு..அவ்வப்போது விலகுவர்.

வேறு ஒரு நண்பர்..இவர் பத்திரிகைகளில் அரசியல் விமரிசகர்.அவரிடம்..'உன்னால் எப்படி..குடைந்து..குடைந்து பார்த்து அரசியல்வாதிகள் பற்றி எழுத முடிகிறது?'என்றபோது, அவர்..'நான் வக்கீலுக்கு படித்தவன்..அதனால் ஓட்டை எங்கு என்று அறிந்துக் கொள்ளமுடியும்.அதனால் அவர்கள் குறைகளை..கண்டுபிடிப்பது எளிதாய் இருக்கிறது..ஆகவே..அவர்களுடன் நான் புத்திசாலியாக இருக்கிறேன்'(?!) என்றார்.

சில நண்பர்கள்..தங்கள் சுய லாபத்திற்காக பழகுவர்.அவர்கள் நினைத்த காரியம் முடிந்ததும்..நம்மை கழட்டி விட்டு விடுவார்கள்.

சிலர் எப்போதும் ..விரக்தியாகவே..இருப்பார்கள்.இவர்கள் வாயைத்திறந்தாலே..'எல்லாம் மோசம்..நாடு பாழாகிக் கொண்டிருக்கிறது.நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது' என்று பேசுவார்கள்.

வேறு சிலர்..தான் தவறு செய்தாலும்..அதை மறைத்து பழியை பிறர் மீது போடுவார்கள்.இவர்கள் தங்கள் காரியத்தை சாதிக்க..பிறரை பலிகடா ஆக்கவும் தயங்க மாட்டார்கள்.

ஒரு சிலர்..பழகவே..கூச்சப் படுவர்.சிலரோ..எதோ பறிகொடுத்தாற்போல சோகத்திலேயே இருப்பர்.சிலர் வேலை செய்யாமலேயே..நெளுவெடுப்பர்.சிலர் பயந்த சுபாவத்துடன் இருப்பர்.

இதையெல்லாம் எப்படி போக்குவது...நண்பர்கள் உயிர் காப்பான் என்பார்களே..அது பொய்யா?

மனோபாவம்....இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.

பின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா? கண்டிப்பாக முடியும்...

வெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.

வெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.

வெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.

ஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வெல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.

உங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்
வந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

இந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.

அவன்தான் உங்கள் தோழன்.

அவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.

16 comments:

goma said...

மனிதர்களில் இத்தனை நிறங்களா...ஒரே மாதிரி எல்லோரும் இருந்துவிட்டால் ????
கனிகள் அத்தனையும் ஒரே சுவையானால் எப்படி இருக்கும் ,மலர்கள் அனைத்தும் ஒரே வண்ணத்திலும் வாசனையிலும் இருந்து விட்டால் எப்படி இருக்கும் ?
எப்படி கனியின் சுவையையும் மலரின் மணத்தையும் நம்மால் மாற்ற முடியாதோ அதே போல் மனிதர்களின் குணத்தையும் நம்மால் மாற்ற முடியாது...

ஒவ்வொரு மனிதனிலும் ஒரு புது பாடத்தைக் கற்றுக் கொள்ளுவோம்,ஒவ்வொரு மனிதனின் போக்கிலிருந்து புது அனுபவம் பதிந்து கொள்வோம்,

நிகழ்காலத்தில்... said...

அருமையான சிந்தனை

வாழ்த்துக்கள்..

துளசி கோபால் said...

மனிதர்களைக் கவனிப்பதுபோல் ஒரு சுவாரஸியமான விஷயம் வேறொன்னுமில்லை. அதுவும் ஒருசிலர்............!!!!

அவுங்களைப் பத்தி நமக்கு ஏற்கெனவே தெரிஞ்சுருந்தால்...... இன்னும் விசேஷம். பொது இடத்தில் அவுங்க நடந்துக்கறதைக் கவனியுங்களேன்.....

படிக்கும் பாடம் நிறைய உண்டு.

மங்களூர் சிவா said...

/
எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.
/

ஓக்கே!

நல்ல பதிவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..உங்கள் கருத்துக்கும் நன்றி கோமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நிகழ்காலத்தில்... said...
அருமையான சிந்தனை

வாழ்த்துக்கள்..//

நன்றி நிகழ்காலத்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//துளசி கோபால் said...
மனிதர்களைக் கவனிப்பதுபோல் ஒரு சுவாரஸியமான விஷயம் வேறொன்னுமில்லை. அதுவும் ஒருசிலர்............!!!!

அவுங்களைப் பத்தி நமக்கு ஏற்கெனவே தெரிஞ்சுருந்தால்...... இன்னும் விசேஷம். பொது இடத்தில் அவுங்க நடந்துக்கறதைக் கவனியுங்களேன்.....

படிக்கும் பாடம் நிறைய உண்டு.//


வருகைக்கும்..உங்கள் கருத்துக்கும் நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மங்களூர் சிவா said...
/
எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.
/

ஓக்கே!

நல்ல பதிவு.///


நன்றி சிவா

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!!!

உண்மைத்தமிழன் said...

அறிவுரைக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அன்புடன் அருணா said...
பூங்கொத்து!!!//


நன்றி அருணா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அறிவுரைக்கு மிக்க நன்றிகள் ஸார்..!//

வருகைக்கு நன்றி உண்மைத் தமிழன்

குடுகுடுப்பை said...

அருமையான பதிவு. இவற்றில் சிலவாறாக இருந்திருக்கிறேன்/இருக்கிறேன்

ஜோ/Joe said...

//சிலர் எப்போதும் ..விரக்தியாகவே..இருப்பார்கள்.இவர்கள் வாயைத்திறந்தாலே..'எல்லாம் மோசம்..நாடு பாழாகிக் கொண்டிருக்கிறது.நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது' என்று பேசுவார்கள்.//

ஆமா! இந்த கூட்டத்தை ஒழிச்சாலே நாடு பாதி உருப்பட்டுரும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
அருமையான பதிவு. இவற்றில் சிலவாறாக இருந்திருக்கிறேன்/இருக்கிறேன்//


நன்றி குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோ/Joe said...
ஆமா! இந்த கூட்டத்தை ஒழிச்சாலே நாடு பாதி உருப்பட்டுரும்.//

உண்மை ஜோ