Monday, April 16, 2012

கேம்பஸ் இன்டெர்வியூவுக்கு தடை நீட்டிப்பு






கல்லூரிகளில் நேர்காணல் நடத்தி மாணவர்களை நேரடியாக தேர்வு செய்ய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் நேரடியாக சென்று கேம்பஸ் இன்டெர்வியூ எனப்படும் வளாக நேர்காணல் மூலம் மாணவர்களை தேர்வு செய்கின்றன.

இதனால், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளதால், வளாக நேர்காணலை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பழனிமுத்து மனுதாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுத்துறை நிறுவனங்கள் நேர்காணல் நடத்தி நேரடியாக ஊழியர்களை தேர்வு செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்தது.

தற்போது இந்த தடையை நீட்டித்துள்ள உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக 3 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கேம்பஸ் வேலை தேர்வு

1 comment:

ஹேமா said...

படம் பார்த்துக் கவிதை தந்த உங்களுக்கு உப்புமடச்சந்தியில் விருது ஒன்று காத்திருக்கிறது.எடுத்துக்கொள்ளுங்கள் !

http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post_17.html