Wednesday, March 6, 2013

+2 வும்...மடி நெருப்பும்


+2 வும்...மடி நெருப்பும்

இன்று 29-சி பேருந்தில் பயணித்தேன்..

இரு பெண்கள் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.நான் அதை ஒட்டுக் கேட்கவில்லை.பஸ் ஒடும் சத்தத்தையும் மீறி உரக்கப் பேசியதால்...என் விருப்பமில்லாமல் அந்த உரையாடல் காதுகளில் விழுந்தது.

இனி அவர்கள் உரையாடல்..

பொண்ணு +2 பரீட்சை எழுதறா..

என்ன மார்க் வருமாம்..

900 வரும்னு சொல்றா..

பரவாயில்லை..நம்ம மாதிரி ஆட்களுக்கு அது அதிகம் தானே

நீ வேற..அவளை காலேஜ்ல சேர்க்க..உதவி கேட்டு ஒருத்தர் கிட்ட அழைத்துப் போனேன்..அவர் சொன்னார்..'960 மார்க் வாங்கினால்..நான் ஃபீஸ் கட்றேன்னு...

அதுக்கு உன் பொண்ணு என்ன சொல்றா..

அம்மா..பணக்கார வீட்டு பசங்களால நிறைய மார்க் வாங்க முடியும்..என்னால 900 ஏ கஷ்டம்ங்கறா..

நீ என்ன சொன்னே..

அப்படி சொல்லாதே..போன வருஷம்..நம்ம அடுத்தத் தெருவில செருப்பு தைக்கிறாரே..அவர் பொண்ணு 1100 வாங்கலன்னு.அதுக்கு சொல்றா..'போம்மா ..முதல்ல என் பரீட்சையை..பயம் இல்லாம எழுதவிடுன்னு..


இதனால் நாம் அறிய வருவது என்னன்னா..
(1)மக்களிடையே படிப்பு அறிவு வளரணும்னு எண்ணம் ஏற்பட்டிருக்கு..ஆனா அதுக்கான வசதி இன்னும் வரல்லே.

(2) மாணவர்களின் திறமையை..வாங்கும் மதிப்பெண்கள் மட்டுமே தீர்மானிக்கின்றன

3) +2 பரீட்சை எழுதும் மாணவர்களின் வீடுகளில்...மனக் குழப்பமே உள்ளது..

கடைசியாக ஒரு ஜோக்..

டாக்டர் _ உங்க அடி வயத்துல எப்படி இவ்வளவு தீக்காயம் ஏற்பட்டது.
 நோயாளி- என் பையன் +2 எழுதறான்..நல்லா படைக்கணும்னு மடில நெருப்பைக் கட்டிக்கிட்டு இருந்தேன்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விஷயம் + ஜோக்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி dhanapalan