Tuesday, March 12, 2013

விஸ்வரூபம்..இரண்டாம் பாகம்..




விஸ்வரூபம் படம் பல சர்ச்சைகளில் சிக்கி, கமலுக்கு பலர் அறிவுரைகளைக் கூறி, தமிழக அரசுடன் பேசி, இஸ்லாமிய சகோதரர்களுக்காக ஒலிப்பதிவை மியூட் செய்து.., கடன்காரர்களின் அச்சுறுதல் என சொல்லின.ஒருவழியாக வெளிவந்து , இன்னமும் சில அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிரது.

இதனிடையே வசூல் 200 கோடிகளை தாண்டி விட்டது என்றும் கூறப்படுகிறது. கமலும், படத்தின் மூலம் லாபம்தான் என்றுள்ளார்.

இப்போது கமல், விஸ்வரூபத்தில் விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம் என்றுள்ளார்.

இரண்டாம் பாகத்தில், காதல், தாய்..மகன் பாசம் மற்றும் போர்க்களக் காட்சிகள் இருக்குமாம்.

இன்னமும் சில காட்சிகளைச் சேர்த்து, போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் முடிந்துவிட்டால், படம் வெளியிடத் தயாராம்.

இரண்டாம் பாகமாவது சுமுகமாக வர வேண்டுமானால்..கமல் பெருமாளை பழிப்பது நிறுத்தட்டும் என ஆன்மீகவாதிகளும்...

நம்மைப் பற்றி எது சொன்னாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல் இருந்தாலே போதும் என சம்பந்தப் பட்ட சமூகத்தினரும்..

இன்னொருமுறை வீட்டை அடகு வைக்க மாட்டார் என ஃபைனான்சியர்களும்..பேசிக்கொள்ளக் கூடும்.

சராசரி ரசிகனுக்கோ..பால் விலை அதுவரை ஏறாமல் இருந்தால் போதும் என்று மட்டுமே கவலை இருக்கக்கூடும்.



No comments: