Monday, January 11, 2016

வாள்...வாள்..எனக் கத்துபவரா நீங்கள்?



அப்படிப்பட்ட ஒருவர் நோய்வாய்ப் பட்டார்.அவர் பார்க்காத வைத்தியம் இல்லை.

ஒருநாள் அவர் மனைவி அவரை ஒரு நல்ல வெட்னரி மருத்துவரைப் பார்க்கச் சொன்னாள்

'என்னது மிருக டாக்டர் கிட்டேயா? உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?'ன்னு சீறினான் கணவன்.

'எனக்கொண்ணும் மூளை கெட்டுப் போகலே! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு! காலங்காத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னால எழுந்துக்கிறீங்க! அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சுட்டு, குரங்கு மாதிரி 'லபக் லபக்' னு ரெண்டு வாய் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமா ஓடி ஆஃபீசுக்கு போறீங்க.! அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்குக் கீழே வேலை செய்யறவங்க மேல கரடியா கத்தறீங்க! அப்புறம் ஆஃபீஸ் விட்டவுடனே, ஆடுமாடுங்க மாதிரி பஸ்ல அடைஞ்சு வீட்டுக்கு வர்றீங்க! வந்ததும் வராததுமா, நாள் பூரா வேலை செஞ்ச களைப்பில, நாய் மாதிரி என் மேல சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை 'சரக் சரக்' ன்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க! மறுபடியும் விடிஞ்சா அதேமாதிரி கோழி கதைதான்! இப்படி இருக்கிறவ்ங்களை மனுஷ டாக்டர் எப்படீங்க குணப்படுத்த முடியும்? அதனால தான் சொல்றேன் நாளைக்கே ஒரு கால் நடை டாக்டரைப் போய்ப் பாருங்க" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க, - 'கோட்டான் மாதிரி முழிக்காதீங்க" என்றாள் மனைவி 

1 comment:

மாதேவி said...

ஹய்யோ. .....ஹய்யோ. ..