Wednesday, January 20, 2016

ஆம் ஆத்மியில் இணைந்த தலைவர்

அரசியல் தலைவர் நந்திவர்மன், திடீரென ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
அவரது நெருங்கிய நண்பர் அதற்கானக் காரணத்தைக் கேட்க நந்திவர்மன் சொன்னார்..
"எனது பிரச்னை கெஜ்ரிவாலால் தீர்ந்தது அதனால் தான்" .
நண்பருக்குப் புரியவில்லை...நந்திவர்மனே தொடர்ந்தார்..
"எனக்கு இரண்டு மனைவிகள்.முதல்மனைவி வீட்டுக்குப் போனால் இரண்டாவது மனைவி கோபிக்கிறாள்.
இரண்டாவது மனைவி வீட்டுக்குப் போனால்...முதல்மனைவி என் மீது பீப் சாங்  பாடுகிறாள்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்ன எனத் தெரியாது இருந்தேன்.
இந்நிலையில்,கெஜ்ரிவால், தில்லியில்..ஒத்தப்படை எண் கார் ஒருநாளும், இரட்டைப்படை கார் ஒருநாளும்  என்ற திட்டத்தைக் கொணர்ந்தார்.
உடனே எனக்கும் என் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிட்டது.
முதல் மனைவி வீட்டுக்கு ஒருநாள்..அடுத்தநாள் இரண்டாம்மனைவி வீட்டிற்கு என அதே கெஜ்ரிவால் பாணியில் முடிவெடுத்தேன்.
என் பிரச்னைக்குத் தீர்வு காட்டிய கெஜ்ரிவாலுக்கு நன்றி சொல்லும் விதமாக..அவரது கட்சியில் சேர்ந்து விட்டேன்" என்றார்.

1 comment:

Unknown said...


Hello,
I am Padma from kachhua.com(As business developer).
I have visited your website and it's really good so we have the best opportunity for you.
Earn money easily by advertising with kachhua.com.
For registration :click below link:
http://kachhua.com/pages/affiliate/inquiry
contact us: 7048200816