Thursday, January 21, 2016

அஷ்டாவதானி கே.என்.சிவராமன்



கர்ணனின் கவசமா, சகுனியின் தாயமா, மாஃபியா ராணிகளா..
இன்ன வேண்டும் என்று சொல்லிவிட்டால்...அதை
சூடாக வாசகர்களுக்கு அளித்திட சிவராமன் தயார்.
இன்று..தினகரன் வெள்ளிமலரில் அவரது சினிமா சம்பந்தக் கட்டுரைகள் ....
முழுதும் சினிமாவே சம்பந்தப்பட்ட பத்திரிகை என்றாலும்....பக்கங்களை நிரப்பும் திறமையை நிரூபித்துள்ளது.
ஒரு எழுத்தாளன்..
ஒன்று சிறுகதை எழுதுவான்  அல்லது
தொடர் கதை எழுதுவான் அல்லது
அமானுஷ்ய தொடர் எழுதுவான்
சரித்திரத் தொடர் எழுதுவான்
சினிமா நட்சந்திரங்கள் வாழ்க்கையை எழுதுவான்
சினிமா துணுக்குகளை எழுதுவான்
விமரிசங்களை எழுதுவான்

ஆனால் இந்த சிவராமன் ..எமகாதகன்...

எதையும் எழுதத் தயார் என்கிறான்

அவனை அஷ்டாவதானி என்று சொல்வதைத்தவிர வேறு எந்த சொல்லும் ஞாபகத்தில் வரவில்லை

(சற்று உரிமை எடுத்துக் கொண்டு அவன்..இவன்..என்று சொல்வதற்கு சிவராமன் மன்னிப்பாராக)

No comments: