Tuesday, October 6, 2020

அடைக்கும் தாழ்....

அவளைப் பார்க்காமல் சஞ்செயால் ஒருநாள் கூட இருக்கமுடியாது

அவளுக்கும் அப்படித்ததான்..அவனைக் காணாவிட்டால் வாடி விடுவாள்.

"பால் நினைந்து ஊட்டும் சாலப் பரிந்து.."என்ற திருவாசகம் அவனுக்குத் தெரியும்.

உலக உறவுகளில் தாய்,சேய் உறவிற்கு மேற்பட்ட உறவு ஏதுமில்லை.குழந்தையின் பொருட்டாகத் தன்னையே அர்ப்பணித்தல்..தாய் ஒருத்திக்கே உண்டு.

ஆனால், அவனைப் பொறுத்தவரை அவனது தாய் முகம் கூட அவனுக்கு நினைவில் இல்லை.பிறக்கும் போதே தாயன்பைப் பெறாதவன் அவன்..

அவனைப் பொறுத்தவரை அன்பு என்பதை அவள் மூலமே அறிந்தவன்.அப்படிப்பட்டவள், தன்னைவிட்டு ஒரேயடியாக விலகிச் செல்லப் போகிறாள் என்பதை அந்த விநாடி வரை எதிர்பார்க்கவில்லை.

யாரோ வரும் ஓசை கேட்கிறது.

"சாதனா வெளியே வா..இதோ பார் இனிமே இவங்கதான் உனக்கு அப்பா..அம்மா"என இருவரை ஆதரவற்ற குழந்தைகள் விடுதி காப்பாளர் அன்னபூரணி அம்மாள் காட்ட..அந்த எட்டு வயது சிறுமி தத்து கொடுக்கப் படுகிறாள் .

தன்னிடம் தனி அன்பு செலுத்தி வந்த சாதனா..கண்களில் நீர் வழிய சஞ்செயிற்கு "டா..டா" காட்டிவிட்டு செல்கிறாள்

"சஞ்செய், உள்ளே வா.." என்ற அன்னபூரணிஅம்மாளின் குரல் கேட்கிறது அவனுக்கு.

No comments: