Sunday, October 11, 2020

"ஒரே போடு.."

 அண்ணா நகர்..


தனி பங்களா."சாந்தி  நிலையம்"..எனும் பெயரைத் தாங்கி நின்றுக் கொண்டிருந்தது இரும்புக் கதவுகளுடன் இணைந்திருந்த கான்கிரீட் தூண்.


அப்பங்களாவின் கதவினைத் திறந்து வெளியே வந்த மாணிக்கம்..கீழே போடப் பட்டிருந்த செய்தித் தாளை எடுத்துக் கொண்டு..அருகில் வரந்தாவில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து படிக்கத் தொடங்கினார்.


ஒரு ஆட்டோ வெளியே வந்து நின்றது.அதிலிருந்து இறங்கியவன், இரும்புக் கதவினைத் தள்ளிக் கொண்டு அவரின் எதிரே வந்தான்.


அவனைப் பார்த்தார்.சதுர முகம்.அடர்த்தியான மீசை..மஞ்சள் பனியன்..பனியனில் எலும்புக் கூட்டின் படம்..


அவனைப் பார்த்து, "யாரப்பா நீ? யாரைப் பார்க்கணும்?" என்றார்.


"ம்..நீதான் வேணும்"என்றபடியே..முதுகுப் பக்கத்திலிருந்து எடுத்த அரிவாளால், அவரை ஒரே போடு பாட..அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.


"கட்..கட்.." என்று இயக்குநர் குரல் கொடுக்க , அதுவரை ஓடிக் கொண்டிருந்த காமிரா நிறுத்தப்பட்டது.


ஒரு பெரிய காட்சி ஒரே டேக்கில் முடிந்த மகிழ்ச்சி அந்த மெகா சீரியல் படபிடிப்பு குழுவினர் முகத்தில் தெரிந்தது.

No comments: