Sunday, October 11, 2020

கம்பனின் "ஏரெழுபது"

 வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூல் "ஏரெழுபது" ஆகும்.அதிலிருந்து இன்று பாடலைப் பார்ப்போம்)


அழுங்குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும்
எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ
உழுங்கெழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச்
செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல்


அழுகின்ற குழந்தைக்கு தான் கொண்ட அன்பின் மிகுதியால் பால் கொடுத்து பசியாற்றும் தாயினைப் போல எல்லா உயிர்களின் மேலும் உருவாகின்ற அருளாகிய குணம் உடைய விவசாயிகள் உலக உயிர்களுக்கெல்லாம் உணவுக் கொடுத்துக் காக்கும் உகழ்ச்சி உடையவர்கள் ஆவார்கள்.மேலும் உழவு செய்யப் பயன்படும் கலப்பையின் நுனியில் இருக்கும் (கொழு) இரும்புக் கருவியில் நெற்பயிரின் கரு சிறப்படைந்து, உலகில் உயிரினங்கள் தோன்றுமாறு வளம் பொருந்திய திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மன்..உழவுத் தொழில் புரியும் விவசாயிகளைப் படைத்து உலக உயிர்களைப் படைத்துள்ளான்,வேறு புகழ்ச்சிக்கெல்லாம் அப்பாற்பட்டு விளங்கும் உயர்வினை உடையவர்கள் இவர்கள் ஆவர்

No comments: