Tuesday, October 20, 2020

தன்னைத்தான் காக்கின்...

 வீட்டு வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டு வெளியே வந்த கற்பகம்,ஆட்டோவிலிருந்து இறங்குபவளைக் கண்டாள்."இன்னிக்கும் ஆரம்பிச்சாச்சா? என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.


ஆட்டோவிற்குக் காசு கொடுத்து விட்டு, கையில் ஒரு சிறு பெட்டியுடன் அழுதபடியே வீட்டினுள் வந்தாள் மீனாட்சி.


"என்ன ஆச்சு? ஏன் அழறே? அழாம விஷயத்தைச் சொல்லு " என்றாள்மீனாட்சியிடம்.


"இப்போ ஒன்னும் கேட்காத..சாயங்காலம் என்னைத் தேடி இங்கே வருவார்.அப்போ அவர் கிட்ட கேளு.இனிமே நான் அங்கே போக மாட்டேன்..உனக்கு பாரம்னா சொல்லு வேற எங்கேயாவது போய்க்கிறேன்" 


கடந்த சில மாதங்களாக..கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு மீனாட்சி அடிக்கடி அங்கு வருவது வழக்கமாகி விட்டது.


மாலையில் சுந்தரம் வந்தார்.அவரைப் பார்த்த கற்பகம், "இது உங்களூக்கே நல்லாயிருக்கா?" என்றாள்.


"என்னை என்ன பண்ணச் சொல்ற.என் கோபம்தன உனக்குத் தெரியுமே..ஆனா கோபம் வந்தா அடுத்த வினாடியே அது மறந்துடும்.முன்னெல்லாம் நான் கோபப்பட்டா அம்மா அதை புரிஞ்சுண்டு மௌனமா இருப்பா.ஆனா, இப்ப எல்லாம் இவளும் பதிலுக்குப் பதில் கோபப்படறதால சண்டை வலுத்து இது போல ஆகிவிடறது.சரி..சரி.. மீனாட்சி..கிளம்பு..இனிமே கோபப்பட மாட்டேன்" 


அப்பாவும்..அம்மாவும் கிளம்பிச் செல்வதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் கற்பகம்..

No comments: