Tuesday, January 8, 2013

வாய் விட்டு சிரிங்க..




உனக்குப் பிடிக்குமேன்னு சோளப்பொரி வாங்கிவந்தேன்..
எனக்கு அது பிடிக்காது...பாப்கார்ன் தான் பிடிக்கும்

2.உனக்கும்..உன் மனைவிக்கும் சண்டையா? கடைசியா என்ன ஆச்சு
நான் பிறந்த வீட்டுக்கு வந்துட்டேன்

3.(இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள்) ஒருத்தி- என்னைவிட நீ கொடுத்து வைத்தவ..நாலு பிள்ளங்க..நாலு மருமகளோட சண்டை போடலாம்.ஆனா எனக்கு ஒரே பிள்ளை..ஒருத்தியோட மட்டும்தான் சண்டை போட்டுக்கிட்டு இருக்க முடியும்.

4.இயக்குநர்- (கதாசிரியரிடம்)தொப்புள்ல பம்பரம் விட்டாச்சு..ஆம்லெட் போட்டாச்சு..நீ வேற ஐடியா கொடுய்யா
கதாசிரியர்- கதாநாயகியை நாய் கடிச்சுடுது.. டாக்டர் 14 ஊசி போடணும்னு சொல்லிடறார்..அப்படின்னு எழுதறேன்..14 முறை தொப்புளை குளோசப்ல காட்டிடலாம்.

5.அந்த கிளினிக்ல என்ன கூட்டம்
ஆடி தள்ளுபடியாம்..ஒரு ஆபரேஷன் செஞ்சுக்கிட்டா ஒரு ஆபரேஷன் இனாமாம்

6.அந்த தயாரிப்பாளர் வீட்டு வாசல்ல ஒரே கிழவிகள் கூட்டமா இருக்கே...என்ன விஷயம்
அவர் எடுக்கப்போற படத்துக்கு 18 வயசு புதுமுகம் தேவைன்னு விளம்பரம் கொடுத்தாராம்..தவறி 81ன்னு பிரசுரமாயிடுச்சாம்.


3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்.... கலக்குங்க தலைவரே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்.... கலக்குங்க தலைவரே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்... கலக்குங்க தலைவரே...