Saturday, March 16, 2013

முடி கொடுத்து லட்டு தின்ன ஆசையா...?




தலைமுடியை பக்தர்கள் ஆண்டவனுக்குக் காணிக்கையாகத் தருவது பல கோவில்களில் நடைபெறுகிறது.முடி காணிக்கையில், திருப்பதி முதலிடம் வகிக்கிறது.

முடி காணிக்கை மூலம், திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஆண்டிற்கு 100 முதல் 150 கோடி வரை கிடைக்கிறது.

வரும் ஏப்ரல் மாதம் முதல், நீளமான முடியைக் கொடுக்கும் பக்தர்களுக்கு, அதாவது 31 அங்குலம் நீள முடியைக் கொடுக்கும் பக்தர்களுக்கு..லட்டு பிரசாதம் இலவசமாக வழங்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.அதற்கான டோக்கன்கள் வழங்கப்படுமாம்.ஒரு டோக்கனுக்கு ஐந்து லட்டுகள் இலவசமாகக் கொடுக்கப்படுமாம்.

நீளமான தலைமுடியை காணிக்கையாய் செலுத்தும் பக்தர்களுக்காக , திருமலையில், சுதர்சனம் சத்திரம் வளாகத்தில்,தனியாக முடிக்காணிக்கை செலுத்த, சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறதாம்..

கண்ணா..லட்டு தின்ன ஆசையா....

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு நன்றி...

தமிழ்மகன் said...

கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

புரட்சி தமிழன் said...

//முடி காணிக்கையில், திருப்பதி முதலிடம் வகிக்கிறது.// மொட்டையடிப்பதில் திருப்பதி முதலிடம் வகிக்கிறதுனு சொல்லுங்க