Tuesday, July 1, 2014

.குறுந்தொகை - 28



நமக்கு ஒரு கவலை எனில் அதை பங்கு பெற யாரும் வரமாட்டார்.ஆனால், நம் மனமோ...ஆறுதலை எதிர்ப்பார்க்கும்.இன்னும் சிலர் உள்ளனர்...நாம் வேதனைப் பட்டாலும் பரவாயில்லை, நமக்கு வேண்டாதவன் இரட்டிப்பு வேதனைப் பட வேண்டும் என நினைப்பர்.

அதாவது எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிராளிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என நினைப்பர்

தனக்குத் தூக்கம் வராமல் இருந்தால், பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரைப் பார்த்து, "எப்படி தூங்குகிறான் பார்" என பொறாமைப் படுவார்கள்.

இந்த பாடலின் தலைவியும், கிட்டத்தட்ட அதே நிலையில் இருக்கிறாள்.தலைவனைப் பிரிந்து, அவன் வராததை எண்ணி தூக்கம் இன்றி இருக்கிறாள். ஆனால், ஊர் உறங்குகிறதே என கோபப்படுகிறாளாம்.

இனி பாடல்-

பாலை திணை -  பாடலாசிரியர் ஔவையார்


முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
 
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
 
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
 
அலமர லசைவளி யலைப்பவென்

உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே.

                       -ஔவையார்

உரை-

சுழன்று அசைந்து வரும் தென்றல் காற்று வருத்தாது நிற்க,, என் தலைவனை நான் பிரிந்து வருந்துவதை உணராமல், தூங்கும் இந்த் ஊரில் உள்ளோரை நான்(சுவர் முதலியவற்றில்) முட்டுவேனா?(ஏதேனும் கருவி கொண்டு) தாக்குவேனா? ஓலமிட்டு கூப்பிடுவேனா? என்ன செய்வேன் என தெரியவில்லையே!

No comments: