Thursday, April 12, 2018

ஒய்ஜிபியும் யுஏஏவும்- 12

 (Flight 172 நாடகத்தில் மௌலி)

1970...மற்றுமொரு வெற்றி ஆண்டாக இவர்களுக்கு அமைந்தது.
கண்ணன் வந்தான் நாடகம் மூலம் யுஏஏவிற்கு வந்த மௌலியின் திறமையைக் கண்டு  அறிந்தார் ஒய்ஜிபி.
முன்னதாக நண்பர்களுடன் சேர்ந்து ஓருரு நாடகங்கள் எழுதியிருந்த மௌலியிடம் யுஏஏவிற்காக ஒரு நாடகம் எழுதச் சொன்னார்.
மௌலியின் பேனா "FLIGHT 172" என்ற நகைச்சுவை நாடகத்தை எழுதித் தந்தது.
வயிறு வலிக்க சிரிப்பார்கள் என்று சொல்வதுண்டு.உண்மையில் இந்நாடகத்திப் பார்த்தவர்கள் அனைவருக்கும் சிரித்துச் சிரித்து வயிறுவலி வந்தது என்பது உண்மை.

  (கதாசிரியர் மௌலி)
மௌலியும், ஒய்ஜிஎம் மும் சேர்ந்து நாடக மேடையைக் கலக்கினர்.உடன் சேதுராமன் என்ற கலைஞரும் மக்களை நகைச்சுவை அருவியில் குளிப்பாட்டினர்
நாடக உலகின் லாரல்-ஹார்டி என மக்கள் போற்றினர்.மீண்டும், மீண்டும் நாடகத்தைப் பார்த்தனர்.
சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த காமெடி நாடகங்களில் இந்நாடகத்திற்கும் சிறப்பு இடமுண்டு.
170 முறைகளுக்கு மேல் இந்நாடகம் மேடை கண்டது .
மௌலி என்னும் வைரத்தை பட்டைத் தீட்டி பிரகாசிக்க வைத்தவர் ஒய்ஜிபி என்றால் மிகையில்லை.
மௌலியின் graph கலையுலகில் ஏறத்தொடங்கியது

No comments: