Monday, April 9, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 6

யூஏஏ ஆரம்பித்து 66 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இதுவரை இக்குழு அரங்கேற்றியுள்ள நாடகங்கள் 66.அதாவது சராசரியாக வருடம் ஒரு நாடகம்
நாடகங்கள் நடத்த சந்தர்ப்பங்கள் அரிதாகி வரும் நிலையில், இக்குழுவினர் மட்டும் அரங்கேற்றம் செய்யும் நாடகங்கள் வெகு எளிதில் நூறு காட்சிகள் நடத்துகின்றனரே! அது எப்படி? என ஆச்சரியப்படுபவர்களுக்கு என் பதில்..

சும்மா கிடைத்துவிடவில்லை சுதந்திரம் என்பார்கள்.ஆம்., நம் நாடு சுதந்திரம் அடைய, எவ்வளவு தலைவர்கள் தியாகம் செய்துள்ளனர்?!

தியாகம், நாட்டுப்பற்று,நேர்மை, தன் உடல்நலத்தையும் பொருட்படுத்தாத சேவை..இவையெல்லாம்தான் நம் நாட்டிற்கான சுதந்திரம் கிடைக்க மூலாதாராம்.

கிட்டத்தட்ட யூஏஏ வெற்றிக்கும் அதுதான் காரணம்.நாடகத்தின்பாற் பற்று, கடின உழைப்பு, குடும்ப நலனைவிட நாடக வளர்ச்சிக்கு அதிக நேரம் செலவிட்டது போன்ற தன்னலமற்ற சேவைகளே காரணம் எனலாம்

இனி இவர்கள் அரங்கேற்றிய நாட்கங்களைக் காண்போம்..

முதல் நாடகமாக, ஏ டி கிருஷ்ணசாமி என்பவர் எழுதிய வரதட்சணை அரங்கேற்றினர்.என்ன ஒரு பொருத்தம்.

நாடகத்தைத் தனது இரண்டாவது மனைவியாக எண்ணிய ஒய்ஜிபிக்கு வரதட்சணை கொடுத்து மாப்பிள்ளை ஆக்கிக் கொண்டது யூஏஏ.,

இந்நாடகம் ஒருமுறை நடந்தது.வாழ்வில் திருமணமும் ஒரு முறைதானே நடக்கும்.

ஆனால், அந்நாளில், அமெச்சூர் குழுக்கள் , தங்களுக்குள் நாடகம் போட்டு, ஒருமுறை நடத்தித் திருப்தி அடைந்தனர்.அதற்கு இவர்களும் விதிவிலக்கல்ல.

இரண்டாவதாக அரங்கேறிய நாடகம் திரு டி.கே கோவிந்தன் என்பவர் எழுதிய.மனோரதம் ஆகும்.இந்நாடகம் 3 காட்சிகள்.

மூன்றாவது ஆர்.பார்த்தசாரதி என்பவர் எழுதிய, "கலை கொலை கேஸ்" அரங்கேற்றம் ஆனது.இந்நாடகம் பன்னிரெண்டு முறை நடந்தது

மேலே சொன்ன மூண்ரு நாடகங்களும் 1952ஆம் ஆண்டே அரங்கேறின.மூன்று நாடகங்களும் சேர்த்து அவ்வாண்டு 16 முறை இக்குழுவினர் மேடை ஏறினர்.

அடுத்து, பட்டு எழுதிய "It happened at Mid Nighat" என்ற திரில்லர் நாடகம்.48 காட்சிகள்.அடடா...என்னே ஒரு முன்னேற்றம்.

1954ல் பட்டுவும் ஏ டி கிருஷ்ணசுவாமியும் எழுதிய "Oh! What a Girl" 53 காட்சிகள் நடந்தது. 

No comments: