Sunday, July 15, 2018

நாடகப்பணியில் நான் - 7

அடுத்து உள்ளூரிலேயே கிணற்றுத்தவளையாய் சுற்றிக் கொண்டிருந்தால் போதாது என தீர்மானித்த நாங்கள் அம்பத்தூரைவிட்டு சென்னையில் ஒரு நாடகத்தை நடத்தத் தீர்மானித்தோம்.

என்ன நாடகம் போடுவது? என்ற கேள்வி எழுந்த போது, ஏற்கனவே ஒரு மணிநேர குறு நாடகத்தை, நடிகர்திலகம் ரசித்த நாடகத்தையே இரண்டுமணி நேரத்திற்குக் காட்சிகளை சேர்த்தால் என்ன? என எண்ணினோம்.

மௌலி அதற்கு ஒப்புக் கொண்டு, மேலும் சில நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்து "BON VOYAGE"  என்ற பெயரில் முழு நேர நாடகமாக்கினார்

சென்னை வாணிமகாலை ஒருநாள் வாடகைக்கு எடுத்தோம்.டிக்கட்டுகளை விற்றோம். நாடகத்திற்கான போஸ்டர்களைப் போட்டோம்.இரவில் போஸ்டர்களை நாங்களே ஒட்டினோம்.
நாடகத்தை எம் ஆர் ராஜாமணி இயக்கினார்.

நாடகத்திற்குத் தலைமை தாங்கியவர் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.ஸ்ரீனிவாசன். முன்னிலை ஹேமமாலினி(!!).

தனது, தலைமையுரையில் பேசிய திரு ஏ எல் எஸ்., அவர்கள், மௌலியின் எழுத்தையும், நடிப்பையும் பார்த்து "இந்த நடிகர் கண்டிப்பாக எதிர்காலத்தில் திரையுலகில் பிரகாசிப்பார்' என்றார்.

அவர் வாக்கு அப்படியே பலித்துள்ளதை நாம் அறிவோம்.

தவிர்த்து அன்றைய நாடகம் மௌலியை பின்னாளில் பிரபல நகைச்சுவை நாடக எழுத்தாளராக ஆக பிள்ளையார் சுழி போட்டது.

அது எப்படி என அடுத்த பதிவில்

(தொடரும்)

No comments: