Thursday, September 18, 2008

வாய் விட்டு சிரியுங்க

மங்களூர் சிவாவிற்கும் இந்த ஜோக்கிற்கும் சம்பந்தமில்லை

எனக்கு துன்பம் வந்தப்போ என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் என் கூடவே இருந்தாங்க
உனக்கு என்னிக்கு துன்பம் வந்தது
கல்யாணமாச்சே எனக்கு மறந்துட்டியா?

2.நான் மனைவி சொல்லைக் கேட்காம எதுவுமே செய்ய மாட்டேன்.இதுவரை ஒரு காரியம் தான் தெரியாம செஞ்சேன்.அதுக்காக அவஸ்தை பட்டுக்கிட்டு இருக்கேன்
அது என்ன காரியம்
அவளை மணந்து கொண்டதுதான்

ஆற்காடு வீராசாமிக்கும் இந்த ஜோக்கிற்கும் சம்பந்தமில்லை

3.முன்பெல்லாம் மேலதிகாரியைப் பார்த்தா பயப்படுவே..இப்ப அந்த பயம் போயிடுச்சா
இனிமே..அவர் என்னை மின்சாரம் இல்லா காட்டுக்கு மாற்றுவேன்னு பயமுறுத்த முடியாதே

கோவிகண்ணனுக்கும் இந்த ஜோக்கிற்கும் சம்பந்தமில்லை

4.புள்ளி விவரப்படி..தினமும் ஒரு ஆள் இந்த இடத்தில் விபத்தில் மாட்டிக்கொள்கிறான்
ஐயோ..பாவம்..தினமும் அந்த ஆளே ஏன் மாட்டிக் கொள்கிரான்

இந்த ஜோக்கிற்கும் ச்சின்னப்பையனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

5.ஆஃபீஸிற்கு வந்ததும்..பத்தரையிலிருந்து 11 வரை எங்க அதிகாரி தூங்கிடுவார்..அந்த நேரத்தில் தான்...நான் பதிவுகளூம்,பின்னூட்டங்களும் இடுவேன்

இந்த ஜோக்கிற்கும் டோண்டு ராகவனுக்கும் சம்பந்தமில்லை

1.நீ எப்படி ஒரே சமயத்தில இரண்டு இடத்திற்கும் போவேன்னு சொல்றே!
ஒரு இடத்துக்கு நான் போவேன்..ஒரு இடத்திற்கு என் போலியை அனுப்புவேன்

10 comments:

சின்னப் பையன் said...

ஹா ஹா ஹா!!! ஏன் எல்லாமே ஒரே சம்மந்தமில்லா ஜோக்கா இருக்கு இன்னிக்கு????

Kanchana Radhakrishnan said...

//ச்சின்னப் பையன் said...
ஹா ஹா ஹா!!! ஏன் எல்லாமே ஒரே சம்மந்தமில்லா ஜோக்கா இருக்கு இன்னிக்கு????//

சம்மதம் இல்லா ஜோக்குகள் சம்பந்தம் இல்லாமத்தானே இருக்கும்

கோவி.கண்ணன் said...

வரவர வாய்விட்டு சிரிங்க மெருகேறிக்கிட்டே இருக்கு !

கலக்கல்.

Naadi said...

Sambandam Illai sambandam illainu solittu, ore sambandamaa uruvaakiteengale.

Subash said...

4ஆவது சூப்பரோ சூப்பர்

Kanchana Radhakrishnan said...

//சுபாஷ் said...
4ஆவது சூப்பரோ சூப்பர்//


நன்றி சுபாஷ்..இப்போ உங்களுக்கான ஒரு ஜோக்..

ஏல்லாரையும் புகழ்ந்தே பேசிக்கிட்டு இருக்காரே...அவர் யார் தெரியுமா?
தெரியாதே
அவர் பெயர் சுபாஷ்

Kanchana Radhakrishnan said...

//Naadi said...
Sambandam Illai sambandam illainu solittu, ore sambandamaa uruvaakiteengale.//


யாருங்க இவரு..சம்பந்தம் இல்லாமே மூக்கை நுழைக்கிறது..அடடே...நீங்களா...வாங்க..உங்களுக்கு சம்பந்தம் இருக்கு
வருக்கைக்கு நன்றி

Kanchana Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
வரவர வாய்விட்டு சிரிங்க மெருகேறிக்கிட்டே இருக்கு !

கலக்கல்.//


பாராட்டறவங்க இருக்கிற வரைக்கும்..பாராட்டப்பட வேண்டியவங்க இருப்பாங்க கோவி

Anonymous said...

:-))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

varukaikku nanri anaani