Monday, September 22, 2008

வடிவேலு..விஜய்காந்த் விவகாரம்-விஜய்காந்த் பேட்டி

ஊரில் கேட்ட அனைவருக்கும் ..வடிவேலு விவகாரம் கருணாநிதியின் சதி என்று கூறிய விஜய்காந்த்..எங்கள் சரடு பத்திரிகைக்கு பிரத்யேகப் பேட்டிக் கொடுத்தார்.
அப்போது சரடு நிருபர் கேட்ட கேள்விகளும்..அதற்கு விஜய்காந்த் பதில்களும்

நிருபர்-கலைத்துறையில் இருக்கும் நீங்கள் இருவரும் சண்டை போட்டுக் கோள்வது நன்றாகவா இருக்கிறது

விஜய்காந்த்-இதற்கு யார் காரணம் என நான் விரிவாக அனைவருக்கும் விளக்கி விட்டேன்..ஆனால் இதுவரை சொல்லாத தகவலை உங்களுக்கு சொல்கிறேன்.2011ல் நான் முதல்வராய் வந்ததும்..கலைத்துறை அமைச்சர் பதவி கேட்டார் வடிவேலு..அதற்கு நான் மறுத்துவிட்டேன்.

நிருபர்_ஏன்

விஜய்-மக்கள் விரும்பினால் தருகிறேன் என்றேன்

நிருபர்-மக்கள் என்றால்

விஜய்-என் மனைவி பிரேமாவும்,மச்சான் சதீஷூம்

நிருபர்- ஆமாம்..இதில் கலைஞர் எங்கு வந்தார்

விஜய்-நான் நடித்து சமிபத்தில் பெட்டிக்குள் போன படத்தை கலைஞர் டி.வி.க்கு கேட்டனர்..நான் மறுத்து விட்டேன்..அந்த கோபத்தில் வடிவேலுவை கிளப்பி விட்டுள்ளார்.இப்போதைக்கு இதுதான் சொல்வேன்

நிருபர்-மதுரைக்காரர் என்ன சொல்கிறார்.

விஜய்-நீங்கள் யாரைச்சொல்கிறீர்கள் என புரிகிறது. நான்,வடிவேலு,லீலாவதிகொலை வழக்கில் தற்போது விடுதலையாகி உள்ளவர் ஆகிய அனைவரும் மதுரைதான்.இப்போதைக்கு இதைத்தான் சொல்வேன்.மற்ற விஷயங்களை தேர்தல் வரும்போது சொல்வேன்.

இத்துடன் பேட்டியை முடித்துக்கொண்டார்.

5 comments:

விஜய் ஆனந்த் said...

:-))))...

கருத்தாழம்மிக்க, பல்சுவைப்பேட்டி!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//விஜய் ஆனந்த் said...
:-))))...

கருத்தாழம்மிக்க, பல்சுவைப்பேட்டி!!!//

வருகைக்கு நன்றி விஜய்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// rapp said...
:):):)//

:-))))

சின்னப் பையன் said...

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ச்சின்னப் பையன் said...
:-)))//

:-)))))