Thursday, September 25, 2008

உண்மையா..பொய்யா..என்னவோ நடக்குது

பல விஷயங்களில்..நாட்டு நடப்புக்களைப் பார்த்து நாம் சொல்லும் வார்த்தைகளே இவை.
இன்று...உண்மை மட்டுமே பேசுவேன்..என்று ஒருவன் சொல்வானானால் அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம்.
பொய் பேசாதவர்களே இன்று இருக்க முடியாது.
அலுவலகத்தில் விடுமுறை தேவையானால்..எற்கனவே செத்துவிட்ட நம் தாத்தா,பாட்டிகள் உதவிக்கு வந்து..அன்றுதான் மீண்டும் சாகிறார்கள்.
தான் வாங்கும் உண்மை சம்பளத்தை மனைவியிடம் கூறுபவர்கள் எத்தனை.
5000 ரூபாய்க்கு ஒரு புடவையை வாங்கிவிட்டு அத விலை 3000 என்று சொல்லாத மனைவிகள் இருக்கிறார்களா?
தன்னைவிட மதிப்பெண் அதிகம் வாங்கினவனைப் பற்றி பேசாமல்...தான் தான் முதல் மதிப்பெண் வாங்கினது போல் நடிக்கும் மாணவர்கள் எத்தனைப் பேர்,
சுருங்கச் சொன்னால்..பொய் ..நம் வாழ்வில் நம்முடன் ஒன்றிவிட்டது.
நாம் பேசுவது பொய் என்று தெரிந்துவிட்டால்...
தப்பிக்க நமக்கு இருக்கவே இருக்கிறான் வள்ளுவன்.,'பொய்மையும் வாய்மை இடத்தே என்று வள்ளுவனே சொல்லி இருக்கார்'என அவரை துணைக்கு இழுத்து விடுவோம்.

ஒரு சமயம்..அக்பர்..பீர்பாலிடம் 'உண்மைக்கும் பொய்க்கும் அப்படி என்ன வித்தியாசம் என்றார்.
உடனே பீர்பால்'நான்கு விறர்கடை வித்தியாசம்'என்றாராம்.
நான்கு விரல்களை காதுக்கும்,கண்ணுக்கும் இடையில் வைத்து'காதால் கேட்பதெல்லாம் உண்மையாகி விடாது..ஆனால் கண்ணால் காண்பது நிஜம்.அதனால் காதுகளால் கேட்பதை வைத்து எதையும் தீர்மானிக்கக் கூடாது..கண்ணால் பார்த்து தீர விசாரித்தே உண்மையை நிர்ணயிக்க முடியும்'என்றார்.
அதனால் காதிலே கேட்பதையெல்லாம் நம்பிவிடக் கூடாது.
ஆமாம் கண்ணால் பார்த்தால் அது நிஜமா...தெரியவில்லையே..
'கண்ணை நம்பாதே..உன்னை ஏமாற்றும்..'என ஒரு கவிஞன் சொல்லி இருக்கானே!!!!

21 comments:

Anonymous said...

பதிவு நல்லாயிருக்கு...ஐய்யயோ..நான் பொய் சொல்லலீங்க..உண்மையாத்தான் சொல்றேன்

சின்னப் பையன் said...

உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கவெ முடியாது...

ஏன்னா...

உண்மைன்னு இன்னும் படமே வரலே.... அவ்வ்வ்...

மத்தபடி பதிவு சொல்ற மேட்டர் சூப்பர்....

manikandan said...

/////// தான் வாங்கும் உண்மை சம்பளத்தை மனைவியிடம் கூறுபவர்கள் எத்தனை.//////

சார். இது உங்க தலைமுறை இல்ல சார்...கொலை விழும் சம்பளம் எல்லாம் சொல்லாட்டி. (பொய் சொன்னா )

////// தன்னைவிட மதிப்பெண் அதிகம் வாங்கினவனைப் பற்றி பேசாமல்...தான் தான் முதல் மதிப்பெண் வாங்கினது போல் நடிக்கும் மாணவர்கள் எத்தனைப் பேர் ///////

இப்ப எல்லாம் மார்க் ஜாஸ்தினா மரியாதை கிடைக்காது !

ஒருத்தன் சொல்றது பொய்ன்னு உங்களுக்கு தெரியும்னா அவன் சொல்றது பொய் ஆகுமா ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Anonymous said...
பதிவு நல்லாயிருக்கு...ஐய்யயோ..நான் பொய் சொல்லலீங்க..உண்மையாத்தான் சொல்றேன்//


வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அனானி..(உண்மையான நன்றிதாங்க)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ச்சின்னப் பையன் said...
மத்தபடி பதிவு சொல்ற மேட்டர் சூப்பர்....//
சின்னப்பையன்னாலும்..விவரமா புரிஞ்சுக்கிட்டு பாராட்டியதற்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அவனும் அவளும் said...
சார். இது உங்க தலைமுறை இல்ல சார்...கொலை விழும் சம்பளம் எல்லாம் சொல்லாட்டி. (பொய் சொன்னா )//



இன்றைய தலைமுறை இரு சாராருக்கும் இது பொருந்தும் அல்லவா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை...மாணவர்களின் திறமையே இன்று மதிப்பெண்களை வைத்துத் தானே தீர்மானிக்கப்படுகிறது//

என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை...மாணவர்களின் திறமையே இன்று மதிப்பெண்களை வைத்துத் தானே தீர்மானிக்கப்படுகிறது

கோவி.கண்ணன் said...

உண்மை உறங்காது, பொய் விழிக்காது !

:))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அவனும் அவளும் said
ஒருத்தன் சொல்றது பொய்ன்னு உங்களுக்கு தெரியும்னா அவன் சொல்றது பொய் ஆகுமா ?//

பொய் சொல்பவனுக்கு..தான் சொல்வது பொய் என்றுதெரியுமல்லவா?அதைத்தான் சொல்கிறேன்.
அதை நம்புவர்..பொய்யாக நம்புவர் போல் நடிக்கிறார்.
ஆக..ஒரு பொய்யர்..இன்னொரு பொய்யரையும் உருவாக்குகிறார் :-)))))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// கோவி.கண்ணன் said...
உண்மை உறங்காது, பொய் விழிக்காது !

:))))))//


உண்மை உறங்காது..சிறிது காலம் உறங்குவது போல பொய்யாக நடிக்கும் :-)))))))
பொய் விழிக்காது..ஆம்...விழித்தால் மாட்டிக்கொள்ளும்.
நன்றி..கோவி

Naresh Kumar said...

//உண்மைன்னு இன்னும் படமே வரலே.... அவ்வ்வ்...//

யார் சொன்னது. மம்முட்டி நடிச்ச தெலுங்கு டப்பிங் படம் வந்துருக்கு. படம் உண்மையிலியே சஸ்பென்ஸ் கலந்த புலனாய்வு சம்பந்தப் பட்ட படம்!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// Naresh Kumar said...
//உண்மைன்னு இன்னும் படமே வரலே.... அவ்வ்வ்...//

யார் சொன்னது. மம்முட்டி நடிச்ச தெலுங்கு டப்பிங் படம் வந்துருக்கு. படம் உண்மையிலியே சஸ்பென்ஸ் கலந்த புலனாய்வு சம்பந்தப் பட்ட படம்!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்....///

மம்முட்டி நடிச்ச தெலுங்கு டப்பிங் படம்....உண்மையிலேயே உங்களை நம்பறேன்.... அவனும் அவளும் பின்னூட்டத்துக்கான என் பதிலைப் பாருங்க.
இருந்தாலும்..உங்க பின்னூட்டத்தை ச்சின்னப்பையனுக்கு அனுப்பி வைக்கிறேன்

குடுகுடுப்பை said...

என் பெயர் உண்மை.

Anonymous said...

வாய்மையே வெல்லும்?
வாய் மெய்யை வெல்லும்?

குடுகுடுப்பை said...

நீங்க என் பதிவில வந்து சிரிச்சது மெய்யா பொய்யா அய்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வருங்கால முதல்வர் said...
என் பெயர் உண்மை.//

அரசியல்வாதி உண்மை என்றால் அது பொய் என்று எனக்குத் தெரியாதா..அதுவும் வருங்கால முதல்வர் வேறு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Anonymous said...
வாய்மையே வெல்லும்?
வாய் மெய்யை வெல்லும்?//


:-)))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
நீங்க என் பதிவில வந்து சிரிச்சது மெய்யா பொய்யா அய்யா//


:-))))))))))

Anonymous said...

உண்மை எது பொய் எதுன்னு நமக்கும் தெரியலே..நம்ம கண்ணை நம்மாலே நம்பமுடியலே..இப்படியும் ஒரு கவிஞன் சொல்லியிருக்கான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Anonymous said...
உண்மை எது பொய் எதுன்னு நமக்கும் தெரியலே..நம்ம கண்ணை நம்மாலே நம்பமுடியலே..இப்படியும் ஒரு கவிஞன் சொல்லியிருக்கான்.//

:-)))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
நீங்க என் பதிவில வந்து சிரிச்சது மெய்யா பொய்யா அய்யா//


..உண்மை..உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை