Wednesday, May 18, 2011

114 எம்.எல்.ஏ.,க்கள் கோடீஸ்வரர் ஆவது எப்போது ..

தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 234 எம்.எல்.ஏ., க்களில் 120 பேர் கோடீஸ்வரர்களாம்.

அதாவது 52 விழுக்காடு கோடீஸ்வரர்கள் ஆவர்.

இந்த 120 கோடீஸ்வர எம்.எல்.ஏ., க்களில் தி.மு.க., வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 பேரில் 75 விழுக்காடு கோடீஸ்வரர்கள்.

அடுத்தபடியாக காங்கிரஸ் 5 பேரில் மூவர் கோடீஸ்வரர்கள்.

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., க்களில் 146 பேரில் 55 விழுக்காடு கோடீஸ்வரர்களாம்.

பாவம்...234ல் 120 போக மீதம் 114 பேர்.

இவர்கள் கோடீஸ்வரர்கள் ஆவது எப்போது.

இவர்கள் பதவிகாலம் முடிவதற்குள்...அந்த இலக்கை எட்டுவார்கள் என எதிர்பார்ப்போம்.

7 comments:

பனித்துளி சங்கர் said...

அடக கொடுமையே இவங்கலுமா !?????

Anonymous said...

எல்லோரும் புதியவர்கள் அரசியல் தகிடுதத்தங்கள் புரிவதற்குள் பதவி முடிந்துவிடும்...

MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோச்சி போங்க...

சிநேகிதன் அக்பர் said...

இனிவரும் காலங்களில் அப்படியெல்லாம் நடக்காதென நம்புவோமாக :)

Unknown said...

எதுக்கோ ஐடியா குடுக்கிற மாதிரி இருக்கு

கும்மாச்சி said...

சரிதான் இப்படியே இவனுங்க கொடீஸ்வரனுங்க ஆனா நாம எப்போ லட்சாதிபதி ஆகிறதான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
பனித்துளி சங்கர் ❤ !
.சதீஷ்குமார்
Mano
அக்பர்
ரமேஷ் பாபு
கும்மாச்சி