Sunday, July 8, 2012

பிரபல பதிவரின் தந்தையார் அமரர் ஆனார்




பிரபல பதிவரும், எழுத்தாளருமான ஷைலஜா அவர்களின் தந்தையும். முதுபெரும் எழுத்தாளருமான ஏ.எஸ்.ராகவன் காலமானார்

 எழுத்தாளர் ஏ.எஸ்.ராகவன் சென்னையில் இன்று மதியம் அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 85.
1960 - 70 களில் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளிலும் சிறுகதைகள், தொடர்கதைகள், குறுந்தொடர்கள் எழுதியவர். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்ற இவர், எழுத்தாளராக மட்டுமல்லாமல் ஓர் சமூக ஆர்வலராகவும் விளங்கியவர். இவர் சென்னை நங்கநல்லூரில் வசித்துவந்தார்.
மறைந்த ஏ.எஸ்.ராகவன், எழுத்தாளர்கள் ஷைலஜா, ராஜரிஜி ஆகியோரின் தந்தை. எழுத்தாளர் இந்திராசௌந்தர்ராஜனின் பெரியப்பாவுமாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
ஷைலஜா, ராஜரிஷி ஆகியோருக்கு இப்பிரிவை தாங்கும் திறனை அளிக்க இயற்கையை வேண்டுகிறோம்.



8 comments:

ராமலக்ஷ்மி said...

அன்னாரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தனைகள். தங்கள் மூலமாகவே தகவல் அறிகிறேன். தோழி ஷைலஜா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும் பிரார்த்தனைகள்.

ராமலக்ஷ்மி said...

அன்னாரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தனைகள். தங்கள் மூலமாகவே தகவல் அறிகிறேன். தோழி ஷைலஜா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும் பிரார்த்தனைகள்.

இராஜராஜேஸ்வரி said...

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
ஷைலஜா, ராஜரிஷி ஆகியோருக்கு இப்பிரிவை தாங்கும் திறனை அளிக்க இயற்கையை வேண்டுகிறோம்.

Amudhavan said...

ஏ.எஸ்.ராகவன் அவர்களின் படைப்புக்களை நிறைய படித்து ரசித்திருக்கிறேன். அன்னாரின் மறைவுச் செய்தியறிந்து மிகவே வருந்துகிறேன். திருமதி ஷைலஜா அவர்களுக்கு இந்தப் பதிவின் மூலமாக எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு அவரது சோகத்தில் பங்கேற்கிறேன்.

தி.தமிழ் இளங்கோ said...

// பிரபல பதிவரும், எழுத்தாளருமான ஷைலஜா அவர்களின் தந்தையும். முதுபெரும் எழுத்தாளருமான ஏ.எஸ்.ராகவன் காலமானார் // என்ற செய்தியினை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். தந்தையின் பிரிவுத் துயரில் இருக்கும் சகோதரி ஷைலஜா அவர்களுக்கு உங்கள் மூலம் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டு காளை said...

என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கோள்கிறேன்.

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

ஏ.எஸ்.ராகவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தனர், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நம் அனைவரையும் எழுத்துலகத்தையும் விட்டுப்பிரிந்துள்ள திரு. ஏ.எஸ். ராகவன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

நமது சக பதிவர் திருமதி: ஷைலஜா அவர்களுக்கும், திரு. ராஜரிஷி அவர்களுக்கும், இப்பிரிவை தாங்கும் திறனை அளிக்க இறைவனை வேண்டுகிறோம்.

ஆழ்ந்த அனுதாபங்காளுடன்,
VGK [வை.கோபாலகிருஷ்ணன்]