Monday, October 1, 2012

பட்டுக்கோட்டை பிரபாகரும், சரித்திரக் கதையும்..




ஆனந்த விகடனில்..நட்சத்திர எழுத்தாளர்களின் அணிவகுப்பு என்ற வரிசையில் பல சிறந்த எழுத்தாளர்கள் கதைகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.

பத்திரிகைகள் சிறுகதைகளையே பிரசுரிக்க மறந்துள்ள நிலையில்..தரம் வாய்ந்த ஒரு கதையாவது விகடனில் படிக்கமுடிகிறதே என வாசகர்கள் மகிழ்கின்றனர்.

இந்நிலையில் சென்ற வாரம் விகடனில் பட்டுக்கோட்டை பிரபாகரனின் சரித்திரக்கதை 'ஆனந்தவல்லியின் காதல்' பிரசுரமானது.

அதைப் படித்ததும்..எனக்குத் தோன்றிய முதல் கருத்து..இக்கதையில் என்ன இருக்கிறது என நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதே..

மிகவும் அமெச்சூர்த்தனமான கதை.

பல தவறுகள்..

அநிருத்தன் என்னும் மன்னன் வலுவான சேனையைக் கொண்டு ராஜ்ஜியத்தின் எல்லைகளை விரிவுபடுத்துபவனாம்.அவன் விஜயநந்தன் என்னும் குறுநில மன்னனிடம் கப்பம் கட்டுகிறானா...அல்லது போரைச் சந்திக்க வேணுமா? என்கிறானாம்.அந்த வருத்தத்தில் அவன் இருக்கையில் 'அவனது மகளை தனக்கு கேட்கிறானாம்' அநிருத்தன்.அதற்கு விஜயநந்தன் சம்மதிக்கிறானாம் மகிழ்ச்சியுடனும்..போரிலிருந்தும் தப்பிக்கலாம் என.

ஆனால் இளவரசியோ நந்தகுமாரன் என்னும் கட்டியக்காரனை விரும்புகிறாளாம்.அவளும், நந்த குமாரனும் ஒரு சிறு நாடக மாடி தப்பித்து இலங்கை சென்று மணமுடித்து வாழ நினைக்கிறார்களாம்.

அதற்காக அவன் விஜயநந்தனிடம் மாட்டிக்கொண்டு, இளவரசியை காதலிப்பதாகக் கூற, இளவரசி இல்லை என மறுக்க, மன்னன் அவனுக்கு உயிருடன் கல்லறைக் கட்ட அவன் கல்லறைக் கட்டும் நபர்களில் ஒருவனான அவன் நண்பனிடம்...ஒரு கல்லுக்கு பதில் அங்கு வெறும் சுண்ணாம்பு வைத்து கட்டிவிடு என்கிறானாம்.அவன் நண்பனோ, அவனுக்கும் இளவரசி மீது ஆசைவர அப்படிச் செய்யவில்லையாம்.ஆனால் நந்தகுமாரனின் தங்கை பொன்னி , கல்லறையை முடிக்கும் முன் கோழிக்கறி ஊட்டுகிறாளாம் நந்தகுமாருக்கு.

அன்று பௌர்ணமி ஆனதால்..இளவரசி தோழியுடன் கடலில் குளிக்க..கடல் அவளை இழித்துச் செல்கிறதாம்.அவள் உடன் வந்த வீரர்கள் அவளை காப்பாற்ற முடியவில்லையாம்.அவள் உடலும் கிடைக்கவில்லையாம்.

ஆனால் நந்தகுமாரன் நண்பன் துரோகமிழைத்தாலும், பொன்னி ஊட்டிய கோழியின் எலும்பில்மஜ்ஜை நீக்கி அதில் சிறு கத்தி வைத்து அனுப்ப, அதன் மூலம் நந்தகுமார் தப்பித்து, நண்பனின் படகில் மறைந்து கொள்கிறானாம்.இதற்கிடையே, கடலில் மூழ்கியது போல நடித்த இளவரசி , நந்தகுமாரின் மற்றொரு நண்பனின் படகில் ஏறி காத்திருக்க.நந்தகுமாரை ஏமாற்றும் நண்பன் அங்கு வந்து..இளவரசி மீதான காதலைச் சொல்லி தன் துரோகச் செயலை கூற, அந்த படகில் மறைந்திருந்து வந்த நந்தகுமார் அவனைக் கொன்று இளவரசியுடன் இலங்கை பயணிக்கிறானாம்.

மெகாசீரியலுக்கு ப.பி., வசனம் எழுதுவதால்..இதிலும் அங்கங்கே சின்னச்சின்னத் திருப்பங்களை வைத்துள்ளார்... மனதில் அவை எதிர்பாரா திருப்பங்கள் என எண்ணி.

இந்தக் கதையை வேறு சாதாரணமான எழுத்தாளன் எழுதியிருந்தால்..'பிரசுரிக்க தகுதியில்லை' என விகடன் திருப்பி அனுப்பியிருக்கும்.

 இந்தப் பதிவிற்கு பல மைனஸ் ஓட்டுகள் விழலாம்..ஆனால் என் மனதில் இக்கதைப் பற்றி தோன்றியது.

1 comment:

alav said...

oru sarithira kathayil rasikka vaikum thirupangaludan eppothu ulla reader-ai..padikka vaithale athu maberum vetri than..athu p.k.p in vetri than...he deserves the title...star writer...