Tuesday, October 16, 2012

ஊழலோ..ஊழல்...




பல தியாகங்களைச் செய்து நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது காங்கிரஸ் என நாம் படித்திருக்கிறோம்..

ஆனால்..நாடு போகும் போக்கைப் பார்த்தால்...ஊழல் கட்சி காங்கிரஸ்..நாட்டு வளங்களை அழித்தது காங்கிரஸ் என அடுத்த தலைமுறையினர் படிக்க வேண்டுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு ..கடந்த நான்கு வருட காங்கிரஸ் ஆட்சியைப் பாருங்கள்..

காமென்வெல்த் ஊழல்..கோடிக்கணக்கில்..

2ஜி ஸ்பெக்டர்ம் ஊழல்..கோடிக்கணக்கில்

நிலக்கரி சுரங்க ஊழல் கோடிக்கணக்கில்

மத்திய அமைச்சர் அறக்கட்டளை ஊழல் 76 லட்சங்கள்..

இவையெல்லாம் வெறும் புகார்கள்தான் என்று கூறினால்..ஆம்..புகார்கள் தான்..ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள்..

கண்டிப்பாக பத்திரிகைகள் சொன்ன அளவு கோடிகள் ஊழல் இல்லாமல் இருக்கலாம்...ஆனால் ஊழல் நடந்திருப்பது என்னவோ உண்மை..

இதுபற்றி சமீபத்தில் ஒரு மத்திய அமைச்சர் பேசுகையில்...மக்கள் ஃபோஃபர்ஸ் ஊழலை மறந்துவிடவில்லையா...அதுபோல நிலக்கரி ஊழலையும் மறந்து விடுவார்கள்...எனப் பேசுகிறார்.என்னே..ஒரு பொறுப்பற்ற பேச்சு..

நேற்று ஒரு மைய அமைச்சர் 76 லட்சம் ஒரு மத்திய அமைச்சர் செய்த  ஊழலா..ஜுஜுபி...இந்த  பணம் சர்வசாதாரணம் ஒரு மத்திய அமைச்சருக்கு..கோடிக்கனக்கில் என்றாலும் பரவாயில்லை என்ற பொருள் பட பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைவரின் மருமகன் மீது சொல்லப்பட்ட ஊழல் விசாரணை அதிகாரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்..

என்னவோ...மாதவா..நம்ம தலையெழுத்து இவர்களை எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என புலம்புவதைத் தவிர சாதாரண குடிமகனால் என்ன செய்ய முடியும்?

2 comments:

Easy (EZ) Editorial Calendar said...

நீங்கள் சொன்னது மிக மிக சரி...நம்மளை போல சாதாரண மக்களால என்ன பண்ண முடியும்!!!!!!!!!!!!

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Easy