Friday, October 12, 2012

மாற்றான்..(ஒரு மாற்றான விமரிசனம்)




விமல்,அகில் என ஒட்டிப் பிறக்கும் குழந்தைகள் .இந்த இரட்டை குழந்தைகளுக்கு எல்லா உறுப்புகளும் வேறு வேறாக இருந்தாலும்..இதயம் மட்டும் ஒன்றுதான்.இதயம் விமலின் உடலில் உள்ளதாம்.விமல் வல்லவன், நல்லவன்.அகில் நேர்மாறானவன்.

இந்நிலையில் இவர்கள் தந்தையின் அலுவலகத்தில்..குழந்தைகள் பானத்தில் கலக்கப்படும் ..கெடுதலான ஊக்க மருந்து பற்றி விமல் கண்டுபிடிக்க..அவன் கொல்லப்படுகிறான்.விமலின் உடலில் இருந்த இதயம் அகிலுக்கு பொருத்தப்படுகிறது.

விமலின் இதயம் கிடைத்ததுமே அகில் குணம் மாறி நல்லவனாக ஆகிறான்.(மனிதர்களில் நல்லவன்..கெட்டவன் ஆகியவற்றை தீர்மானிப்பது இதயமோ..?!)

பின் அகில் தன் காதலியுடன் வெளிநாடு சென்று...ஊக்க மருந்து விஷயங்களை கண்டுபிடித்து...நடந்த தவறுகளை திருத்துகிறான்..

இப்படியாக போகிறது கதை.ரொம்பவும் மெனக்கட வேண்டாத கதை.

முழுக்க ,முழுக்க படத்தை சூர்யா தன் தோள்களில் சுமக்கிறார்.அதில் வெற்றியும் பெறுகிறார்.

கிராஃபிக்ஸ் வேலைகள் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

காதலியாக வரும் காஜல் 'பளீச்" என அனைவரையும் வசீகரிக்கிறார்.

பாடல்கள் சுமார் ரகம் தான்.

மொத்ததில்..சாதாரணமாக படம் பார்க்கும் அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.சூர்யா ரசிகர்கள் பலமுறை பார்ப்பர்.வசூலில் படம் வெற்றி பெறும்.

(டிஸ்கி- கண்ணதாசன் நடத்தி வந்த பத்திரிகையில் ராசிபலன் எழுதுபவர் அந்த வாரம் எழுதவில்லையாம்.உடனே கண்ணதாசன் முந்தைய வார இதழ்கள் சிலவற்றை எடுத்து..ராசி பலன்களை அதில் இருந்தபடி ராசிகளுக்கு மாற்றி மாற்றி எழுதி வெளியிட்டாராம்.
அப்படியே..நாமும்..படம் பார்க்காமல்..சில விமரிசனங்களைப் படித்து விமரிசனம் எழுதினால் என்ன? எனத் தோன்றியதன் விளைவே இவ்விமரிசனம்)

2 comments:

வே.நடனசபாபதி said...

திரைப்படம் பார்க்காமல் விமரிசனம் எழுதுவது நடைபெறுவதை நன்றாக நையாண்டி செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வே.நடனசபாபதி