Monday, October 15, 2012

தயாரிப்பாளரும்...சினிமா கதாசிரியரும்...




தயாரிப்பாளர் - என்ன கதாசிரியரே! நம்ம் படத்திலே கிளைமாக்ஸ் என்ன எழுதியிருக்கீங்க..

கதாசிரியர் _ மூணு நாலு கிளைமாக்ஸ் எழுதியிருக்கேன்..உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வைச்சுக்கலாம்..

            முதல் கிளைமாக்ஸ்..வில்லன் கதாநாயகியை தூக்கிக் கிட்டு கார்ல வேகமா போயிடறான்...கதாநாயகனுக்கோ கார் இல்லை...அதனால தெருவில இருந்த ரோடு            ரோலர்ல அவனை சேஸ் பண்ணி பிடிச்சு..நாயகியைக் காப்பாத்தறான்..

தயாரிப்பாளர் - இது சாதாரணமாய் எல்லாப் படத்திலேயும் வரது தானே..புதுசா..மக்கள் நம்பறாப்போல சொல்லுய்யா..

கதாசிரியர் - .வில்லன் எலிகாப்டர்ல போறான்...கதாநாயகன்...ஏர்போர்ட்ல நுழைஞ்சு...அங்க புறப்படத் தயாராயிருந்த பிளேனை எடுத்துக் கொண்டு எலிகாப்டரை துரத்தறான்.வில்லனோட நடுவானில சண்டை..பிளேன்ல இருந்த பயணிகள் முகத்திலே அதிர்ச்சி...கடைசியிலே எலிகாப்டர்ல இருந்த வில்லனை..பிளேன்லே இருந்து தாவித் தாவிப்போய் அழிக்கிறான்.

தயாரிப்பாளர்- இது  நம்பறமாதிரி  இருக்கு..வேற ஏதாவது வைச்சிருக்கியா..

கதாசிரியர்- வில்லன் கதாநாயகனை மின்சார நாற்காலில கட்டிப்போட்டுட்டு...மின்சாரத்தை ஆன் பண்ணிட்டு ஓடிப்போயிடறான்...கதாநாயகன் செத்துட்டதா...மக்களை நம்ப வைக்கிறோம்.ஆனால் அவன் சாகலை.. அந்தக் காட்சியை மக்கள் நம்பவைக்க...தமிழக மின்சார வாரியத்தோட போர்டைக் காட்டறோம்.

தயாரிப்பாளர்- அடடா..அற்புதம்..பிரமாதம்..நம்பறமாதிரியான கிளைமாக்ஸ்...இதையே வச்சுப்போம்.

3 comments:

Yaathoramani.blogspot.com said...

கடைசி கிளைமாக்ஸ் அருமை
தமிழ் நாட்டுக்கு மிகச் சரி
மொழிமாற்றம் செய்யும் போது மட்டும்
மாற்றிக் கொள்ளலாம்
சுவாரஸ்யமான பதிவு
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ramani