Thursday, November 29, 2012

தமிழுக்கு அமுதென்று பெயர் - 4




தமிழில் பல அற்புதங்கள் உண்டு..

முன்னெறி தெய்வங்களான அம்மாவும்..அப்பாவும்..தமிழின் முதல் உயிரெழுத்தான 'அ'வில்தான் ஆரம்பிக்கின்றன .
அடுத்து சொல்லப்படும் தெய்வமான ஆசிரியர் தமிழின் இரண்டாம் உயிரெழுத்தான "ஆ" வில் ஆரம்பம்
அடுத்து சொல்லப்படும் தெய்வம்..தமிழின் மூன்றாம் உயிழுத்தான 'இ'யில் ஆரம்பம்..இறைவன்.

அத்துடன் இல்லாது அ வில் ஆரம்பிக்கும் சொற்கள் கிட்டே கொண்டு வருவதுடன் சம்பந்தப்பட்டவை. அண்மை,அருகாமை,அப்புதல்,அள்ளுதல்,அணைத்தல்

'இ' கீழே கொண்டுவருவதற்கான சொல் - இறக்குதல்,இறங்குதல்,இழிதல்

'உ' எழுத்து தூரத் தள்ளுவதற்கும்..மறைப்பதற்கும் உரித்தானது ..உதைத்தல்,உமிழ்தல்,உண்ணுதல்,உதறுதல்

'எ' எழுச்சி வார்த்தைகள்..எடுத்தல்,எட்டுதல்,எய்தல்,எழுதல்

இனி தமிழ் சிலேடை-

இம்மை..மறுமை பற்றி ஒரு நிகழ்ச்சியில் கி.வா.ஜ., பேசினார்.அப்போது மைக் தகராறு செய்யவே..உடனே..வேறொரு மைக் பொருத்தப்பட்டது.அதுவும் கோளாறு செய்யவே..உடன் அவர் இம்மைக்கும் வேலை செய்யவில்லை..மறு மைக்கும் வேலை செய்யவில்லை.எனவே வாய் மைக்கே முதலிடம் என்று கூறி மைக் இல்லாமல் பேசி முடித்தாராம்.

துணை நடிகைப் பற்றி யுகபாரதியின் கவிதை ஒன்று

இவள் வீட்டுப் பாத்திரத்தில்
சிலநாளே சுடுசோறு
என்றாலும் நடிக்கிறாள்
திரைப்படத்தில் பலவாறு

2) வயிற்றுக்கு மிகநெருங்கி
வருகின்ற காமெராவில்
தெரியாது இவள் பசியும்
தெய்வத்தின் வஞ்சகமும்


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

கவிதை வரிகள் - உண்மை வரிகள்...
tm2

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்