Wednesday, November 7, 2012

வாய் விட்டு சிரியுங்க..

1) ராகு காலம், எம கண்டம் இதுல எல்லாம் நம்பிக்கையில்லைன்னு எமகண்டத்தில கிளம்பி ஆஃபீஸ் போனியே என்ன ஆச்சு?
எனக்கு முன்னாலேயே அந்த மேனேஜர் எமன் வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்கு

2)மெகாசீரியலுக்கான கதை உங்கக் கிட்ட இருக்கா..எங்கே ஒன் லைன்ல சொல்லுங்க
ஒரு பணக்கார மருமகள்..அவளைக் கொடுமைப் படுத்தற அத்தை..மௌனியாய் கணவன்...
ஆகா..அற்புதம் ..பிடியுங்க அட்வான்சை

3)அவருக்குப் பின்னாலேயே சொம்பைத் தூக்கிக்கிட்டு ஒருத்தர் போறாரே எதற்காக..
இணையதளத்தில ஏதோ சர்ச்சையாம்..நாட்டாமைப் பண்ணப் போறார் முதல்லப் போறவர்..பின்னால அவர் எச்சலைத் துப்ப சொம்போட போறார் உதவியாளர்

4)இந்த சமயத்தில நீ வந்தது என் மனைவிக்குப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன்
எப்படிச் சொல்ற
அவ போட்ட காஃபியை உனக்குக் குடிக்கக் கொடுக்கிறாளே

5)தொண்டர் 1- தலைவருக்கு வயிறு சரியில்லைன்னு நினைக்கிறேன்
தொண்டர்2- எப்படிச் சொல்ற
தொண்டர்1- மக்கள் கிட்ட இரண்டு விரல்களைக் காட்டும் போது திருப்பிக் காட்டறாரே!

6)பல் மருத்துவர்- உங்க மொத்தப் பல்லையும் இன்னிக்கு பிடுங்கியாகணும்
நோயாளி- ரொம்ப வலிக்குமே டாக்டர்
பல் மருத்துவர்- பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பொறுத்துக்கங்க

7)பதிவர் - எனக்கு இதுவரைக்கும் தலைவலின்னு வந்ததே இல்லை
நண்பர்-உங்களாலே மத்தவங்களுக்குத்தானே தலைவலி வரும்

No comments: