Wednesday, November 21, 2012

வாய் விட்டு சிரிங்க...!!




1.நேத்து கண்காட்சியில என் மனைவி காணாம போயிட்டா..
நீ கண்காட்சி போறதை முன்னாலேயே சொல்லக்கூடாது,..நானும் என் மனைவியை அழைச்சுட்டு வந்திருப்பேன்.

2.என் மனைவிக்கும்...எனக்கும் பெரிய சண்டை
ஏன்
ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினார்னு என் மனைவி கிட்ட சொன்னேன்..நான் செத்தா நீ என்ன கட்டுவேன்னு கேட்டா..உன் தங்கச்சியை கட்டுவேன்னு சொன்னேன் அதுதான்.

3. நம்ம தலைவர் ..ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியோட கூட்டு வைச்சிருக்கறதால...நம்ம கட்சிக்கு பச்சோந்தி சின்னம் கேட்கிறாராம்.

4. சுடச்சுட சாம்பாரைக் கொட்டிட்டேன்னு..காதில பஞ்சை ஏன் அடைச்சிக்கிற
நான் சாம்பாரை கொட்டினது உங்க அம்மா மேல..

5.நடுராத்திரி பெண் பார்க்கப்போறியா...ஏன்?
பொண்ணு ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர்...நைட்ஷிஃப்ட் அதுதான்..

6.உன்னை நம்பி வந்தவங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வருது..
நம்பி வரவங்களைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவங்களை எப்படி ஏமாற்றமுடியும்?

7.என்னோட லட்சியமே ஒரு கோவில் கட்டறதுதான்
அவ்வளவு பக்தியா?
அதெல்லாமில்லை...கோவில் கட்டினா...மெகா சீரியலுக்கு வாடகைக்கு விடலாம்..அதுதானே இன்னிக்கு முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

8..நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்
என்ன சொல்றீங்க
இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே

9.(வேகமாக ஓடும் காரை நிறுத்திய போக்குவரத்து காவலர்) சார்...நீங்க மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில போறீங்க
ஏன்..அபாண்டமா பொய் சொல்றீங்க?..நான் காரையே 10 நிமிஷம் முன்னாலதான் எடுத்தேன்.

10.உங்க வீட்டு பெண்கள் எல்லாம்...cat walk பழகறாங்களா? ஏதாவது ஃபேஷன் ஷோவில கலந்துக்கிறாங்களா?
இல்ல...வீட்ல இருக்கிற எலிகளை பிடிக்கத்தான்.

11.பேச்சுப் போட்டியில அரை மணி நேரம் பேசியும் உனக்கு பரிசு கிடைக்கலையா? எதைப்பற்றிப் பேசினே?
சுருங்கச் சொல்லி விளக்க வைப்பது எப்படின்னு

12.வக்கீல் சார்...என் கேஸ் ஜெயிக்குமா?
உண்மையை சொல்லணும்னா..ஜெயிக்கிறது கஷ்டம் தான்
உண்மையைச் சொல்றதாயிருந்தா இருந்தா...உங்களை வக்கீலா வைச்சிருக்க மாட்டேனே


17 comments:

கார்த்திக் சரவணன் said...

4,7 மற்றும் 11 சூப்பர்... நன்றி...

Unknown said...

அனைத்தும் நன்று! சுவைத்தேன்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நகைச்சுவை நன்று.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... அருமை...
tm4

nellai அண்ணாச்சி said...

4. சுடச்சுட சாம்பாரைக் கொட்டிட்டேன்னு..காதில பஞ்சை ஏன் அடைச்சிக்கிற
நான் சாம்பாரை கொட்டினது உங்க அம்மா மேல SUPER BOSS

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வலைஞன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஸ்கூல் பையன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி புலவர் சா இராமாநுசம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி T N Muralidharan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி nellai அண்ணாச்சி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்

Jayadev Das said...

நல்ல ஜோக்குகள்!!


\\5.நடுராத்திரி பெண் பார்க்கப்போறியா...ஏன்?
பொண்ணு ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர்...நைட்ஷிஃப்ட் அதுதான்..\\ நைட்ல பொண்ணு வேலைக்குப் போயிருப்பளே எப்படிடா பார்ப்பே?!! [இந்த ஜோக் எப்படி இருக்கு!! ஹி ......ஹி ......ஹி ......]



\\6.உன்னை நம்பி வந்தவங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வருது..
நம்பி வரவங்களைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவங்களை எப்படி ஏமாற்றமுடியும்?\\ போலிச் சாமியார்கள் அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் இதைத்தான் செய்யுறாங்க. இது ஜோக் என்றாலும் உண்மையை அல்லவா சித்தரிக்கிறது!

மாதேவி said...

ஹா...ஹா...

Unknown said...

super

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Jayadev Das

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மாதேவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bhavani lakshmi