Wednesday, May 2, 2012

நடிகர் கட்சித் தலைவர் ஆனது தவறு...??!!




1)கற்பனை மிக்கவங்க தேவைன்னு தலைவர் கேட்கிறாரே ஏன்?
அவங்க கற்பனையை வைச்சு புதுசு புதுசா ஆளும் கட்சி மேல தப்பு சொல்லலாமாம்

2)ஆளும் கட்சி மாறினாலும் மக்கள் மாறல்லைன்னு எப்படி சொல்ற
ஆளும் கட்சி கூட்டம் முடிந்ததும்..அப்படியே அந்த கூட்டம் எதிர்க் கட்சி கூட்டத்திற்கும் போகுதே

3)சமச்சீர் கல்வியால மாணவர்களுக்கு எந்த பயனும் இல்ல
ஏன் அப்படி சொல்ற
அப்பவும் அவங்க பாடங்களை படிக்க வேண்டியிருக்கே

4)அந்த பேஷன்ட் பொழைச்சுட்டாரா எப்படி
கடைசி நேரத்துல டாக்டர் ஆபரேஷன் வேணாம்னு தீர்மானம் பண்ணிட்டாரு

5)234 தொகுதிக்கும் இடைத் தேர்தல் வந்தா நல்லா இருக்கும்
ஏன் அப்படி சொல்ற
ஒவ்வொரு தொகுதியும் ராஜ உபசாரம் பெறும்

6) அந்த ஆட்சியில இருக்கிற 70 அமைச்சர்ல 35 பேருக்கு ஒரே இலாகாவாமே அப்படியா?
ஆமாம்..
அப்படி என்ன இலாகா
இடைத்தேர்தல் இலாகா..இடைத்தேர்தல் வந்த அந்த தொகுதிக்கு இவங்க போய் பிரசாரம் செய்யணுமாம்

7)ஒரு டிரைவர் - இது வரைக்கும் நான் ஒரு போலீஸ்காரரிடமும் மாட்டியதில்லை
மற்றவர் - எப்படி
முதல் டிரைவர்- எந்தக் கட்சி ஆட்சிக்கு வருதோ..அந்தக் கட்சிக் கொடியை கார் முன்னால பறக்கவிட்டுடுவேன்

8)நடிகரை கட்சித் தலைவர் ஆக்கியது தவறாய் போச்சு
.என்னவாயிற்று
பொதுக்கூட்டம் நடத்த லொகேஷன் பாக்கச் சொல்றார்


No comments: