Sunday, November 11, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி- 1)

-----------------------------------
ஆர்.எஸ் மனோகர்
------------------------------

பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து,அஞ்சல்துறையில் லட்சுமி நரசிம்மன் என்பவர் பணியாற்றி வந்தார்.இவர், படிக்கும் போதே தேசிய சிந்தனைகளும், கலை ஆரவமும் கொண்டவராய் இருந்தார்.

திருவல்லிக்கேணியில் அவர் தங்கியிருந்த ஹோட்டலிலேயே சில இளைஞர்கள் தங்கியிருந்தனர்.அவர்களுக்கு நாடகங்கள் மீது ஆர்வம் இருந்ததை லட்சுமி நரசிம்மன் கண்டார்.

1950ஆம் ஆண்டில் சென்னையில் பிரபல வழக்குரைஞராக இருந்தபடியே , அமெச்சூர் நாடகங்களை நடத்தி வந்த வி. சி. கோபாலரத்தினம் என்பவர் குழுவில் பங்கேற்று நடித்தார் லட்சுமி நரசிம்மன்.பின்னர், தோட்டக்கார விஸ்வநாதன் என்பவர் நடத்தி வந்த குழுவிலும் பங்கேற்றார்

இந்நிலையில், கே பி ரங்கராஜூ என்ற எழுத்தாளர் மூலம்"ராஜாம்பாள்" என்ற படத்தில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அப்படத்தின் தயாரிப்பாளர் இவருக்கு 'மனோகர்" என்று பெயரிட்டார்.பின் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மனோகர் நடித்தார்

முழு நேர நடிப்பை மேற்கொண்ட மனோகர், நேஷனல் தியேட்டர்ஸ் என்ற குழுவினைத் தொடங்கினார்.மிகப் பிரம்மாண்டமான அமைப்புகளை அமைத்து மக்களை வியப்பில் ஆழ்த்தும் நாடகங்களை நடத்தினார்.

இவரின் பல நாடகங்கள் ஒரே ஊரில் பல நாட்கள் நடந்ததுண்டு.

"இலங்கேஸ்வரன்" என்ற நாடகத்தில் இராவணனாக நடித்துப் புகழ் பெற்ற இவர் பெயருக்கு முன் "இலங்கேஸ்வரன்" ஒட்டிக் கொண்டது.

திரைப்படங்களில் பிரபலமாகி நடித்துக் கொண்டிருந்த போதிலும் , விடாது நாடகங்களையும் நடத்தி வந்தார்.ஒரு சமயம், சேலத்தில் கண்காட்சியில் இவர் நாடகத்தைப் பார்த்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம், இவரது நடிப்பு, தோற்றம், வசன உச்சரிப்பு இவற்றைக் கண்டு தங்கள் தயாரிப்பில் வந்த படங்களில் இவரை நடிக்க வைத்தார்.

மாடர்ன் தியேட்டர்ஸில் மட்டும் கிட்டத்தட்ட 18 படங்களில் இவர் நடித்தார்.

(பகுதி - 2 அடுத்த பதிவில்) 

No comments: