Friday, November 2, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 7

--------------------------------
டி எஸ் சேஷாத்திரி
-------------------------------

1960-70களில்  இருந்து மிகவும் பிரபல நாடக நடிகர்.ஸ்ரீதரால் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானவர்

இவர் சாந்திநிகேதன் என்ற நாடகக் குழுவினை நடத்தி வந்தார்.பல சிறந்த நாடகங்கள்மேடையேறின. டி கே எஸ் சந்திரன், சைமன் ஆகியோர் இவர் நாடகங்களில் நடித்தவர்கள்

இவருக்காக மாரா, பிலஹரி,தூயவன், சௌந்தர்யன் ஆகியோர் நாடகங்களை எழுதியுள்ளனர்

பிலஹரி , ஆனந்த விகடனில் எழுதிய நெஞ்சே நீ வாழ்க என்ற சிறுகதையை "ஆலமரம்" என்ற பெயரில் மேடையேற்றினார்.அதுவே பிறகு மேஜர் சுந்தரராஜன், மேடையில் இவர் ஏற்ற பாத்திரத்தை ஏற்க "ஆலயம்" என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து  வெள்ளிப் பதக்கத்தை தேசிய விருதில் வென்றது


ஏ.வி எம் ராஜன், புஷ்பலதா, டைபிஸ்ட் கோபு ஆகியோரும் இவர் நாடகத்தில் நடித்தவர்கள்.முன்னர் சொல்லியுள்ள ஆலமரம் நாடகத்தில் நடித்தப் பின்னர்தான் கோபு என்ற நகைச்சுவை நடிகர் டைபிஸ்ட் கோபு வானார்

30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சேஷாத்திரி நடித்துள்ளார்

இவரது இளவல் பத்மநாபன் என்பவரும் நாடக நடிகர்.இவர் நாடகங்களில் ராஜசேகர், பானுமதி ஆகியோர் நடித்துள்ளனர்.பரத் எழுதிய "தொடரும் அத்தியாயம்" என்ற நாடகம் இவர்களின் வெற்றி நாடகமாகும்

No comments: