Saturday, November 10, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 9 (பகுதி -2)

 (சமீபத்தில் தண்ணீர் தண்ணீர் நாடகத்தை மீண்டும் மேடையேற்றிய கோமலின் மகள் தாரிணி கோமலும்..நாடகத்தில் வந்த ஒரு காட்சியும்)
கோமலின் தண்ணீர் தண்ணீர் நாடகம் தண்ணீர் இல்லாத ஒரு கிராமத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட நாடகம் ஆகும்.அரசியல்வாதிகளாலும், அரசு அதிகாரிகளாலும், கிராமத்து மக்கள் படும் துயரம், தீவிரவாதம் ஏன் உருவாகிறது ஆகியவற்றை இந்நாடகம் நயம்படச் சொன்னது.

1981ல் கே பாலசந்தர், இந்நாடகத்தைத் திரைப்படமாக்கினார்.இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

1982ல் கோமல் மேடையேற்றிய "ஒரு இந்தியக் கனவு" நாடகம் கோமல் இயக்கத்திலேயே திரைப்படமானது.

இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் கோமல் , சில காலம் உதவி இயக்குநர், வசனகர்த்தாவாக ஏற்கனவே பணியாற்றியவர்,"கற்பகம்" "கை கொடுத்த தெய்வம்" பேசும் தெய்வம் ஆகிய படங்களில் கோமலின் பங்கும் உண்டு

"தண்ணீர் தண்ணீர்" நாடகம், எஸ்.சங்கர் என்னும் ஆங்கில பேராசிரியரால் மொழி பெயர்க்கப்பட்டு, பி சி ராமகிருஷ்ணா இயக்கத்தில் மெட்ராஸ் பிளேயர்ஸால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டது

தன் குழுவைத் தவிர , வேறு சில குழுவினருக்கும் கோமல் நாடகங்கள் எழுதித் தந்துள்ளார்.

மேஜர் சுந்தரராஜன் நடித்த "அவன் பார்த்துப்பான்" அவற்றில் ஒன்று

இவரின், "என் வீடு என் கணவன் என் குழ்ந்தை" நாடாம் தொலைக்காட்சியில் மனோரமாவால் நடிக்கப் பெற்று பெரும் பாராட்டுதல்களைப் பெற்றதாகும்.

"சுபமங்களா" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இவர் சில காலம் பணியாற்றியுள்ளார்.

நீரின்றி அமையாது உலகு.கோமலின் தண்ணீர் தண்ணீர் பற்றி சொல்லாமல் தமிழ் மேடைநாடகங்கள் பற்றி யாரும் உரைத்திட முடியாது.கடைசி சொட்டு தண்ணீர் உலகில் உள்ளவரை கோமல் நினைவில் இருப்பார்

இதற்குமேல் "கோமலை"ப் பாராட்ட எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை

No comments: