Sunday, November 18, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் -12 (பகுதி - 1)

-----------------------
"கிரேசி" மோகன்
------------------------------

நடிகர்,நாடக எழுத்தாளர், திரைக்கதை-வசனம் எழுதுபவர்,நாடகத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ரங்காச்சாரி மோகன் ஒரு பொறியியல் பட்டதாரி.தமிழில் வெண்பா எழுதும் திறனைப் பெற்றவர்

சுந்தரம் கிளேட்டனில் சிறிது காலம் வேலை செய்து வந்தார்.அத்தருணம், இவரது எழுத்துத் திறமையைக் கண்டு வியந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், இவரை திரையுலகிற்கு அழைக்க, மோகனால் வேலைப்பளு காரணமாக அதை ஏற்க இயலவில்லை.

மோகன், கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே, 1972ஆம் ஆண்டு கல்லூரி விழாவிற்காக "Great Bank Robbery" என்ற நாடகத்தை எழுதினார்.அதற்காக சிறந்த எழுத்தாளர், சிறந்த நடிகருக்கான விருதினை ,அன்று நாடகத்திற்கு வந்திருந்த கமல்ஹாசன் தர பெற்று கொண்டார்.

பின்னர், தன் தம்பி பாலாஜிக்காக , பாலாஜி படித்த விவேகானந்தா கல்லூரிக்காக நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.

1976ல் எஸ் வி சேகரின் நாடகக் குழுவினருக்காக "கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்" என்ற நாடகம் எழுதினார்.அந்நாடகத்தின் வெற்றியே பின்னாளில் "கிரேசி" என்ற சொல்லை அவர் பெயருக்கு முன்னால் சேர்த்தது  .ஆம்..இனி நாமும் "கிரேசி" மோகன் என்றே இனி சொல்வோம்.

பின்னர், அடுத்து சேகருக்காக இவர் எழுதிய நாடகம், "டெனென்ட் கம்மேண்ட்மெண்ட்ஸ்".அடுத்து ஒன் மோர் எக்சார்சிஸ்ட் நாடகம்.
கிரியேடிவ் என்டெர்டெயினர்ஸ் டிவி வரதராஜனுக்காக "36 பீரங்கி லேன்".காத்தாடி ராமமூர்த்திக்காக 'அப்பா..அம்மா..அம்மம்மா" நாடகம்.

1979ல் தனக்காக 'கிரேசி" கிரியேஷன்ஸ் குழுவினை  துவக்கினார்.இதுவரை 30க்கு மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றியுள்ளார் மோகன்.இவர் நாடகங்கள் ஆயிரக் கணக்கான முறைகள் நடந்துள்ளன.

இவரது குழுவினைத் தவிர வேறு எந்தக் குழுவினரின்  நாடகங்கள் ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கன முறைகள் நடந்ததில்லை.இவரது ஒவ்வொரு நாடகமும் நூற்றுக்கணக்கான முறைகள் நடந்துள்ளன.

இவரது மற்ற நாடகங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

(இவர் வீட்டு ஜன்னல் தொடரும்)

No comments: