Tuesday, November 13, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி -3 )

ஆர் எஸ் மனோகர்
---------------------------

மனோகருக்கான நாடகங்களை துறையூர் மூர்த்தி, இரா.பழனிசாமி, ஏ எஸ் பிரகாசம்,அறிவானந்தம் ஆகியோர் எழுதினர்

இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், துரோணர், மாலிக்காபூர் ஆகிய நாடகங்களை துறையூர் மூர்த்தி எழுதினார்.

சூரபத்மன்,சிசுபாலன், சுக்கிராச்சாரியார்,சிவதாண்டவம், ஒட்டக்கூத்தர் ஆகியவற்றை இரா.பழனிசாமி எழுதினார்

விஸ்வாமித்திரர் நாடகத்தை ஏ.எஸ்.பிரகாசம் எழுதினார்

பரசுராமன்,நரகாசுரன்,இந்திரஜித்,துர்வாசர்,திருநாவுக்கரசர் ஆகிய நாடகங்களை கே.பி.அறிவானந்தம் எழுதினார்.

இந்திரஜித் நாடகத்தை எழுதிய அறிவானந்தம் ஒரு பேட்டியில்...

"எம்.ஆர்.தாவின் குழுவில் நான் சேர்ந்து ரத்தக்கண்ணீர், தூக்குமேடை நாடகங்களில் நடித்து வந்தேன்.ஒருநாள் மனோகரைப் பார்த்து "இந்திரஜித்" நாடகத்தைப் பற்றிக் கூற அதை நாடகமாக எழுதச் சொன்னார்.பிறகு  அவருடன் பணி புரிந்து..அவருக்காக பல நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதினேன்.இந்திரஜித் நாடக அரங்கேற்றம் போது, பத்திரிகையாளர்களிடம்,"என்னைப் பற்றி எழுதாவிட்டாலும் பரவாயில்லை...வளர்ந்து வரும் இந்நாடக ஆசிரியர் அறிவானந்தம் பற்றி எழுதுங்கள்" என்றார்.இது அவரது பெருந்தன்மைக்கு உதாரணம்" என்றார்.

அறிவானந்தம் இன்றும் சில சரித்திர நாடகங்களை எழுதி, நடித்தும் வருகிறார்.

மனோகர், 2006 ஜனவரி மாதம் 10ஆம் நாள் நம்மை விட்டு பிரிந்தார்.

இன்னமும் , அவர் குழுவினைச் சேர்ந்தவர்கள், நாடகங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்களைப் பற்றி பின்னர் காணலாம். 

No comments: