Thursday, November 22, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 14

--------------------
பூவை மணி
-----------------------

30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாடகப் பணியினை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அடக்கமாக செய்து வருபவர் பூவை மணி ஆவார்

இவர் பல வெற்றிநாடகங்களை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார்.

என் நினைவு அடுக்குகளில் இருந்து...சிலசெய்திகளை அவர் வீட்டு ஜன்னல் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்

கீத்மாலிகா என்ர குழுவினருக்காக அவர் எழுதிய சில நாடகங்கள்..

"சபையிலே மௌனம்",

"எங்கள் வீடு கோகுலம் "
(இந்நாடகத்தில் திரைப்பட நடிகை சி ஐ டி சகுந்தலா அவர்கள் நடித்தார்)

"மௌனமான நேரம்", "சாட்சிகள் இல்லையடி பாப்பா""கண்மணியே பேசு", "கற்பூர பொம்மை ஒன்று"

பின்னர் தில்லை ராஜனின் நாடகமந்திர் குழுவிற்காக "ஒரு பொம்மலாட்டம் நடக்குது" நாடகத்தை எழுதினார்

கீத்மாலிகா,கலைவாணி, கீதாஞ்சலி ஆகிய குழுக்களுக்கு இவர் நாடகங்கள் எழுதிக் கொடுத்துள்ளார்.

இவர் எழுத்தில் வந்த அனைத்து நாடகங்களும் வெற்றி நாடகங்களாக அமைந்ததே இவர் திறமைக்கு எடுத்துக்காட்டாகும்

"இன்னொரு சீதை" "தவம்"ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் பங்கு உண்டு.இவற்றிற்கு வசனம் இவரே!

2017ல் இவரது "உறவோடு விளையாடு" நாடகம் கோடை நாடக விழாவில் ஒன்பது விருதுகளையும், மைலாப்பூர் அகடெமியின் 3 விருதுகளையும் பெற்று தந்துள்ளது

2018ல் "விளையாட்டு பொம்மைகள்" ஐந்து விருதுகளைப் பெற்று தந்துள்ளது. இவ்விரு நாடகங்களிலும் நடித்த கிரீஷ் அய்யப்பன், கௌதமி ஆகியோர் சிறந்த நடிகர்/நடிகை விருதினைப் பெற்றனர்.

பூவை மணிக்கு தமிழ் நாடக உலகம் 30க்கும் மேற்பட்ட விருதுகளை சபாக்களின் மூலமும், சமூக நிறுவனங்கள் மூலம் பெற்று தந்துள்ளது.

பிரபல தமிழ் எழுத்தாளர் "பூவை" ஆறுமுகத்தின் மகனான, "பூவை" மணியின் "கற்பூர பொம்மை ஒன்று" மற்றும் "சபையிலே மௌனம்" "உறவோடு விளையாடு" ஆகியவை நூல்களாக வெளிவந்துள்ளன.


No comments: