Monday, November 12, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)

ஆர் எஸ் மனோகர்
-----------------------------

இவரது அனைத்து நாடகங்களும் வெற்றி நாடகங்களே! இவர் நாடகங்களின் சிறப்பு அம்சமே...பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள்தான்.கிட்டத்தட்ட ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வை நமக்கு அளிக்கும்.

மனோகர், மக்கள் வில்லனாகக் கருதும் இதிகாசம், சரித்திர பாத்திரங்களை ஹீரோவாக ஆக்கி தன் நாடகங்களில் நடித்தார்.இலங்கேஸ்வரன்,சாணக்கிய சபதம்,சிசுபாலன்,காடக முத்திரையன் ஆகியவை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

இன்னமும் இவரது, மேற்சொன்ன நாடகங்களும்,மற்றும் சாணக்கிய சபதம்,இந்திரஜித்,சுக்கிராச்சாரியார்,நரகாசுரன்,திருநாவுக்கரசர் ,விஸ்வாமித்திரர்ஆகிய நாடகங்களும் மக்கள் மனதில் இன்னமும் அழியாமல் நிற்பவை எனலாம்

தமது குழுவின் மூலம் 32 நாடகங்களை 8000 முறைகள் மேடையேற்றி நாடக உலகில் இரு இமாலய சாத்னையைச் செய்தவர் மனோகர் ஆவார்.

எதிரொலி எழுப்பும் "எக்கோலிட்" என்ற கருவியை ,முதன் முதலாகப் பயன் படுத்தியவர் இவரே!நாடகத்தில் சிங்கத்தையும்,ஐந்து தலை நாகத்தையும் 3டி அமைப்பில் மேடையேற்றி மக்களை மிரள வைத்தவர் இவர்.

நாடகத்தன்றுநெருப்பாய் இருக்கும் இவர் மற்ற நேரங்களில் நகைச்சுவை உணர்வு மிக்கவர்.சக கலைஞர்கள் மீது அளவில்லா பிரியம் கொண்டவர்.

(அடுத்த வீட்டு ஜன்னல் 10 தொடரும்) 

No comments: