Thursday, May 20, 2010

நட்பின் சிறப்பு என்பது யாதெனில்....

உயிர் காப்பான் தோழன்..என்பர்.

அது எவ்வளவு தூரம் உண்மை என நான் அறியேன்..ஏனெனில் நான் யார் உயிரையும் காப்பாற்றியதில்லை..என்னையும் யாரும் காப்பாற்றியதில்லை.

ஆனால்..நமக்கு வாழ்வில்..ஏற்படும் நண்பர்கள்தான் எவ்வளவு?

பள்ளி பருவத்தில்...உண்டாகும் இளம் நண்பர்கள்..மன விகாரம் இல்லா வயது.கிடைத்த அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ளும் வயது.ஒன்றாக சேர்ந்து விளையாடிய வயது.மாமரத்தில் இருந்து விழும் அல்லது திருடும் மாங்காயை..உப்பு ,காரம் தோய்த்து சாப்பிட்ட நட்பு,கமர்கட்டை காக்காய் கடி கடித்து பகிர்ந்துக் கொண்ட வயது.போட்டி படிப்பில் மட்டுமே.இப்படி அந்த கால நட்பு..மனதில் பசுமரத்தாணி போல பதிந்து இன்றும் நினைவில் அவர்கள் பெயர் தங்கியிருக்கும் நட்பு.

அடுத்து..கல்லூரி கால நட்பு.பெற்றோர் கஷ்டப்பட்டு செலவு செய்து படிக்க வைப்பது தெரிந்தும்..பணத்தைப்பற்றி கவலைப்படாமல் இருக்கும் வயது.இக்காலத்தில் ஏற்படும் நட்பு சிலருக்கு வாழ்வில்..சிகரெட்,மது,மாது..போன்ற பழக்கங்களை ஏற்படுத்தி வைக்கிறது..அப்படிப்பட்டவர் நட்பு இவ்வயதில் அதிகம் கிடைக்கிறது.இப்படிப்பட்ட நட்பு..ஆசைக்காக..சில எதிர்ப்பார்ப்புகளோடு அமைந்து விடுகிறது.இப்பருவ நட்பு கம்பி மேல் நடப்பது போல.

அதைத் தாண்டி வந்தால்..அலுவலகத்தில், உடன் வேலை செய்வார் நட்பு.இந்த சமயம்...நிறைய சம்பாதிக்க வேண்டும்,சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதனாக வரவேண்டும்..அவனைவிட நான் பெரிய ஆளாக வர வேண்டும் என்றெல்லாம் எண்ணக்கூடிய சுயநலம் நிறைந்த நட்பு..

பின் ஓய்வு பெற்றதும்..கிடைக்கும் நட்பு...பழைய வாழ்வை அசை போடும் நண்பர்களுடன்.

இப்படி ஒவ்வொரு பருவத்திலும்..பல வேறுபட்ட நண்பர்கள்..பள்ளி பருவம் முதல்..கடைசி வரை தொடரும் நட்பு..ஒரு சிலருக்கே கிட்டும்.அப்படிப்ப நட்பு அமைந்தால் அதுதான் சிறந்த நட்பு..அப்படிப்பட்டவன் தான் சிறந்த நண்பன்.

ஆனால் எப்பருவத்தில்..எவ்வளவு நாட்கள் தொடரும் நட்பாய் இருந்தாலும்..வீட்டில்..பெற்றோரோ,மனைவியோ கோபப்பட்டால், அதைத் தாங்கும் மனம்..நண்பன் ஒருவன் நம்மை தவறாக புரிந்துக் கொண்டால்..கடுமையாக ஏசி விட்டால்/பேசிவிட்டால் தாங்க மாட்டேன் என்கிறது.

இது தான் நட்பின் சிறப்பு.

(மீள்பதிவு)

14 comments:

சௌந்தர் said...

நட்புக்கு முடிவு இல்லை...

Paleo God said...

இது தான் நட்பின் சிறப்பு. !!

சரிதான்! :))

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு...:-)

vasu balaji said...

வாங்க சார்! நட்பூ! அழகு.

Chitra said...

ஆனால் எப்பருவத்தில்..எவ்வளவு நாட்கள் தொடரும் நட்பாய் இருந்தாலும்..வீட்டில்..பெற்றோரோ,மனைவியோ கோபப்பட்டால், அதைத் தாங்கும் மனம்..நண்பன் ஒருவன் நம்மை தவறாக புரிந்துக் கொண்டால்..கடுமையாக ஏசி விட்டால்/பேசிவிட்டால் தாங்க மாட்டேன் என்கிறது.

இது தான் நட்பின் சிறப்பு.


........ நட்பின் தனித்துவம். அருமையான இடுகை.

Radhakrishnan said...

நண்பனுக்கு நாமும் நல்ல நண்பன் என்றால் மனம் தாங்கிக் கொள்ளும் என்றுதான் இதுவரை தெரிந்து வைத்து இருந்தேன். இது புதிதாக இருக்கிறது. நன்றி ஐயா.

க.பாலாசி said...

நட்பின் மகத்துவம் அருமை.... ‘நல்(ட்)பூதான்....

மங்களூர் சிவா said...

nice!

சிநேகிதன் அக்பர் said...

நன்று சார். மீள் பதிவு போடுற அளவுக்கு வேலையா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

தாராபுரத்தான் said...

வலைச்சரத்து மூலமா வந்தேன். நம்பிக்கைதானுங்க நட்பு.நாம நம்பிக்கை வைப்பவரை விட நம்ம மேல நம்பிக்கை வைக்கிறங்க தாங்க உண்மையான நண்பர்கள்..

cheena (சீனா) said...

அன்பின் டிவிஆர்

நட்பு - விளக்க இயலாதது - அதன் குண நலன்கள் விவரிக்க இயலாதது. ஆம் நட்பு எனப்படுவது தனித்துவம் வாய்ந்த ஒன்று - எல்லோருக்கும் நட்பு ஒரே மாதிரி இருக்காது

நல்வாழ்த்துகள் நண்பரே
நட்புடன் சீனா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
தாராபுரத்தான்
Cheena sir