Friday, April 15, 2011

கொலையும்.. சங்கரமடமும்..





காஞ்சி சங்கரமடத்தைச் சேர்ந்த சங்கரராமன் கொலையானதும்..அதன் காரணமாக சங்கராச்சாரிகள் கைதானதும் நாம் அறிந்ததே.

அந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் நீதி கிடைக்காது(!!) என புதுச்சேரி க்கு மாற்றப்பட்டதும்..இன்றைய நிலையில் பல சாட்சிகள் சங்கராச்சாரிக்கு ஆதரவாக பல்டி அடித்துவிட்டதும் நடந்துவருகிறது.

இந்நிலையில் மீண்டும் ஒரு கொலை வழக்கு வரப்போகிறது.

புதுக்கோட்டையில் சங்கரமடம் உள்ளது.அதன் காவலாளியாக பழனியப்பன் என்ற 60 வயது முதியவர் இருந்து வந்தார்.பத்து ஆண்டுகளாக இங்கு வேலைசெய்து வந்தார்.சாப்பிட மட்டும் வீட்டிற்கு சென்றுவிட்டு மற்ற நேரங்களில் மடத்திலேயே இருப்பார்.

நேற்று (14-4) இரவு 9 மணிக்கு சாப்பிட்டுவிட்டு மடத்திற்கு வந்து படுத்தார்.அடுத்த நாள் காலை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாய்க் கிடந்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இம்முறை பூதம் ஏதும் கிளம்பாது என நம்புவோம்

4 comments:

சி.பி.செந்தில்குமார் said...

நம்பிக்கை தானே வாழ்க்கை

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவமே அநியாயமா இருக்கே....

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவமே அநியாயமா இருக்கே....

vasu balaji said...

இது வேறயா:)