Sunday, November 13, 2011

2ஜி விசாரிக்கும் நீதிபதி...




2ஜி வழக்கை விசாரித்துவரும் நீதிபதி ஓம் பிரகாஷ் சைனி அவ்வளவாக பேசமாட்டாராம்.இவரது பேனாதான் பேசுமாம்.

57 வயதாகும் இவர் முதலில் காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராய் இருந்தாராம்.தில்லி போலீசின் 1981 பேட்சைச் சேர்ந்த 100 எஸ்,ஐ,.களில் இவர் மட்டுமே சட்டத்தின் மீது தீவிர நாட்டம் கொண்டிருந்தாராம்.'இந்தியத் தண்டனைச் சட்டம் குறித்து எங்கள் எல்லோருக்கும் நடைமுறை ஞானம் அவசியம்.ஆனால் சைனி மட்டுமே சட்டத்தைப் படித்தார்' என்கிறார் இவர் நண்பர் ஒருவர்.ஹரியானாவைச் சேர்ந்த சைனி பின் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தேர்வு எழுதி தேர்வானார்.

2ஜி வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டபோது அந்தப்பணிக்கு மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டார் சைனி.

இதற்கு முன் காமென்வெல்த்  விளையாட்டு ஊழல் வழக்கை இவர்தான் விசாரித்தார்.எல்லோரையும் கம்பி எண்ண வைத்தார்.

2ஜிக்கு முன் சைனி தீர்ப்பளித்த வழக்கு..செங்கோட்டையில் துப்பாக்கி சூடு பற்றிய வழக்கு.அந்த வழக்கில் முகம்மது ஆரிஃபிற்கு தூக்குத் தண்டனையும் வேறு ஆறு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கினார்.

இதில் தீர்க்கமான முடிவுடன் இவர் செயல்பட்டார்.

ஆரிஃபிற்கு இவர் அளித்த மரணதண்டனை..பின்னர்  தில்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதி மன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இவர் அதை கண்டு கொள்வதில்லை.

'கனிமொழி விவகார்த்தில் அவரது வழக்கறிஞர்களின் வாதத்தை இவர் அனுதாபத்தோடு செவிமடுப்பது போலத் தோன்றினாலும்..அது பொய்த்தோற்றமே' என்கிறாராம் ஒரு வழக்கறிஞர்.


4 comments:

MANO நாஞ்சில் மனோ said...

தப்பு செய்தவனை[ளை] தண்டித்து பணத்தையும் பறிமுதல் செய்தாள் சரிதான், அதுவரை இவர் மாற்றப்படாமல் இருக்க வேண்டும் தட்ஸ் ஆல்...!!!

தமிழ் உதயம் said...

முறைகேடு குற்றச்சாட்டில் பல நீதிபதிகளின் பெயர் அடிபடும் காலத்தில் - நீதிபதி சைனியாலாவது நீதி காப்பாற்றப்படட்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தமிழ் உதயம்