Saturday, November 5, 2011

இறந்த தாயுடன் இருந்த சிறுமி







நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் வசித்தவர் லாரன்சில் பெரி(28). ஷைலா சில்பெரி என்ற 3 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். லாரன்சில் அடிக்கடி, தனது தாய் மற்றும் சகோதரரிடம் போனில் பேசுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக லாரன்சில் யாருக்கும் போன் செய்யவில்லை.

நேற்று லாரன்சில் பெரிக்கு அவரது சகோதரர் பீட்சில்பொரி போன் செய்தார். ஆனால் யாரும் போன் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பீட்சில்பொரி, லாரன்சில்சின் பக்கத்து வீட்டில் வசித்து தனது நண்பருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.

பக்கத்து வீட்டுக்காரர் லாரன் சில்சின் வீடு அருகே சென்ற போது பிணவாடை வீசியுள்ளது. இதில் சந்தேகமடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்த உள்ளே தாளிடப்பட்டிருந்த கதவை உடைத்து பார்த்தார்.

அப்போது லாரன்சில் பெரி இறந்து கிடந்தார். தாய் இறந்ததை அறியாத ஷைலா பெரி, அவரது அருகில் மயங்கி கிடந்தாள். லாரன்சில் இறந்து 2 நாட்களாகி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

வீட்டை சோதனையிட்ட போது உணவுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. தாய் இறந்ததை அறியாத சிறுமி ஷைலா, பிரிட்ஜில் இருந்த வெண்ணெய், ரொட்டி, பால் ஆகியவற்றை எடுத்து சாப்பிட்டது தெரிந்தது.

பிண நாற்றத்தில் மயங்கிய நிலையி்ல் மீட்கப்பட்ட ஷைலா மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டாள். நல்ல உடல்நலத்துடன் இருந்த லாரன்சில் திடீரென இறந்த காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தகவல் தட்ஸ் தமிழ்


2 comments:

SURYAJEEVA said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

ஹேமா said...

என்ன வாழ்க்கையென வெறுக்க வைக்கும் இப்படியான செய்திகள் !