Sunday, January 29, 2012

அம்மாவின் சக்தி மகத்தானது...




அம்மா...

அவரின் சக்தி மகத்தானது...என்கிறார் பாக்கியராஜ் தனது பாக்யா பத்திரிகையில் கேள்வி பதில் பகுதியில்..

கடவுளின் சக்தியை விட ஒப்புவமை இல்லா சக்தி இந்த உலகத்தில் உள்ளதா என்ற கேள்விக்கு அவரின் பதில்....

ஏன் இல்லாம..நாம் எல்லாருக்கும் தெரிஞ்ச சக்திதான் அது..சொன்னா..நீங்களும் ஒத்துப்பீங்க..அதாவது..

ஒரு மலைப்பிரதேசத்துல மலை உச்சியில் ஓர் இனத்தாரும், அடி வாரத்தில் ஒன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தாங்க.இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை.

ஒரு தடவை மலை உச்சியில இருந்தவங்க அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்தி மலை உச்சியில வச்சுட்டாங்க.

சமூகத்திலிருந்த சில பெரியவர்கள், மலைமேல் இருந்த சமூகத்தினரிடம் சமாதானமாகப் போய் பேசினா குழந்தையை மீட்டுட்டு வர சாத்தியம் இருப்பதா ஊரில் இருந்த இளைஞர்கள் கிட்ட அறிவுரை கூறினாங்க.
,
இளைஞர்கள் சிலர் உடனே முன் வந்தாங்க.அவங்க கடினமான வேலைகள் செய்து பழகியவங்க.எந்தச் செயலை எடுத்தாலும் அதை விடாமுயற்சியோட செய்து முடிக்கும் மனப்போக்கைக் கொண்டவங்க.ஊர்ப் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவங்கதான் சிறந்தவங்கன்னு அவங்களை வாழ்த்தி வழி அனுப்பினாங்க.

இளைஞர்களும் ஆர்வத்தோட கிளம்பினாங்க.அந்த மலையோட சில பகுதிகள் செங்குத்தானவை.அந்த இளைஞர்களால் சீக்கிரமா அப்படி ஒரு பகுதியை ஏறிக் கடக்கமுடியவில்லை.விடாமுயற்சியோட அப்பகுதியைக் கடக்க பல மணி நேரம் பல வழிகள்ல முயன்று, களைத்துப் போய் ஓய்வெடுத்துட்டு காலைல மீண்டும் முயற்சித்தப்போ..

தங்களோட ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக்கிட்டு லாவகமா கீழே இறங்கி வருவதைப் பார்த்து மலைச்சுப் போய், அவ அருகில வந்தவுடன், "நாங்களே ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்று திரும்பியிருக்கிறாயே, உன் கடின முயற்சி எங்களைவிட சிறந்ததாக உள்ளதே..அது எப்படி?'ன்னு வியப்போடு கேட்டாங்க.

அதுக்கு அந்த அம்மா இடுப்பில இருந்த குழந்தையைக் காட்டி, 'பெரிசா ஒண்ணுமில்ல..இது உங்க குழந்தை இல்லை, என் குழந்தை அவ்வளவுதான் வித்தியாசம்'னு பதில் சொன்னப்பத்தான் கண் எதிரில் உள்ள தாய் ஸ்தானத்தோட சக்தி எவ்வளவு மகத்தானதுன்னு அவங்களுக்கு புரிஞ்சது.

டிஸ்கி- தலைப்பைப் அப்டித்து..வேறு எதையோ எதிர்ப்பார்த்து வந்தவரா நீங்க..அப்போ சாரிங்க..


3 comments:

ஹேமா said...

அம்மா பற்றி எத்தனையோ பெருமிதங்கள்.அம்மா என்கிற எல்லா உயிர்களுக்கும் இந்தக் கதை பொருந்தும் !

ராமலக்ஷ்மி said...

அருமை.

aotspr said...

அருமை .,.,


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"