Saturday, January 21, 2012

கைக் குழந்தையுடன் ஈழத் தமிழ்ப் பெண் நார்வேயில் தீக்குளித்து பரிதாப மரணம்!





ஒன்றரை வயது குழந்தையுடன் ஈழத் தமிழ்ப பெண் ஒருவர் நார்வேயில் தனது வீட்டில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
 அவரது சகோதரி யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட வேதனையாலும், தனது அகதி புகலிடக் கோரிக்கையை
நார்வே அரசாங்க அதிகாரிகள் நிராகரித்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தாலும் அவர் இந்த முடிவைத் தேடிக் கொண்டதாக கூறப்படுகிறது.

24 வயதான அந்தப் பெண் ஈழத்தில் உள்ள சாவகச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 2006ம் ஆண்டு முதல் நார்வேயில்
 தஞ்சமடைந்து வசித்து வருகிறார். இவரைப் போலவே நார்வே நாட்டில் தஞ்சமடைந்து வசித்து வரும் குர்திஷ் இனத்தவர்
ஒருவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருந்தது.

அகதி அந்தஸ்து கேட்டு இவர் நார்வே குடியேற்றத்துறையில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் சமீபத்தில் இந்த விண்ணப்பம்
 நிராகரிக்கப்பட்டது. இதனால் இவர் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்தது. இந்த சமயத்தில்தான், யாழ்ப்பாணத்தில் வசித்து
 வந்த இவரது 18 வயது சகோதரி மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நார்வேயில் வசித்து வந்த இப்பெண் பெரும் சோகமும், வேதனையும் அடைந்தார்.

இந்த நிலையில் தான் வசித்து வந்த இருப்பிடத்தில் தனது கைக்குழந்தையோடு அவர் தீக்குளித்து விட்டார்.
படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் முதலில் அப்பெண்ணும்,
 பின்னர் குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இவர்களின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமான அகதிகள் கலந்து கொண்டனர்.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் வழக்கறிஞர் கிறிஸ்டைன் ஆரே ஹான்ஸ் கூறுகையில், தனது தங்கை மீது இப்பெண்
மிகுந்த பாசத்துடன் இருந்து வந்தார். அவரது மரணம் இவருக்கு மிகப் பெரிய வருத்தத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
 பெரும் கவலையுடன் இருந்து வந்தார் என்றார்.

(தகவல் தட்ஸ்தமிழ்)


2 comments:

ஹேமா said...

ஈழத்தின் சோக அவலங்கள் இப்படியே நீண்டுகொண்டுதான் இருக்கிறது.கொஞ்சம் வெளியில் தெரிந்தும் தெரியாமலும் சில !

aotspr said...

வருந்துகிறோம்....


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"