Saturday, January 7, 2012

நக்கீரன் செய்தது சரியா...அதிமுக வினர் செய்தது சரியா..




பட்டிமன்றத் தலைப்பு..

இதன் நடுவராக யாரைப்போட்டாலும் சொல்லப்படப்போகும் தீர்ப்பு..

இவர்கள் செய்ததும் சரியில்லை..அவர்கள் செய்ததும் சரியில்லை என்பதாகத்தான் இருக்கும்..

ஏனெனில்..எந்த ஒரு காரியத்திற்கும், செயலுக்கும்..இரு பக்கங்கள் உண்டு.ஆதரிப்பார் பக்கமும் உண்டு...எதிர்ப்பார் பக்கமும் உண்டு...

நக்கீரன் போன்று அதிமுக வை எதிர்க்கும் பத்திரிகையில்..இப்படிப்பட்ட கட்டுரையும்..முகப்பும் வெளிவராவிட்டால் தான் ஆச்சரியப்பட வேண்டும்..

தினகரன் அலுவலகம் எரிப்பு விவகாரம் ஏன் ஏற்பட்டது...

மக்கள் குரல் பாமக , மார்க்ஸிஸ்ட் தாக்குதல் ஏன்?

எல்லாமே...தொண்டர்களை உசிப்பி விட்டு..விளம்பரம் தேடும் சில இரண்டாம் கட்ட தலைவர்களால் வருவதுதான்.

'இன்வஸ்டிகேடிவ்' ஜர்னல் நடத்த ஆசைப்படும் தமிழ் ஊடகங்கள்..உண்மையில் அப்படிச் செயல் படுவதில்லை....அலுவலகத்தில் அமர்ந்துக் கொண்டு..மோட்டுவளையையைப் பார்த்தபடியே..எந்த செய்தியைப் போட்டால்..மக்கள் உணர்ச்சி வசப்படுவார்கள்...எந்த செய்தியைப் போட்டால்..தான் சார்ந்திருக்கும் கட்சித் தலைமை மகிழும் என்றும்..எதைப் போட்டால் சர்குலேஷன் அதிகரிக்கும் என்றே செயல்படுகின்றனே..தவிர...சொல்லும் செய்திகளில் பத்து விழுக்காடு கூட உண்மை இருப்பதில்லை.

கட்சிகளும் அவ்வாறே இருப்பதுதான் நம் வேதனை...

ஆனால்..சமீபத்திய சில நிகழ்வுகளில் கலைஞரின் அறிக்கை...வரவேற்கத்தக்கதாகவே உள்ளது..

சமீபத்தில் புயல் அழிவுகளை பார்வையிடச் சென்ற கலைஞர்..'நான் மாநில அரசைக் குறை சொல்லவில்லை..இத்தருணத்தில் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம்..என்றும்..புயல் சேதத்தை மாநில அரசு சொல்லித்தான் மைய அரசு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை' எனும் பொருள்பட பேசியுள்ளது வரவேற்கத்தக்கது.

அதே போல நக்கீரன் விஷயத்திலும்..'முதல்வர் பற்றி அவதூறு செய்தி வந்தால்..நீதிமன்றத்தை நாடலாம்' என்றும் கூறியுள்ளார்..அதிகமாய் அதிமுகவை வழக்காய் சாடுவது போல சாடவில்லை..

நில அபகரிப்பு புகார் வந்தால்,,அதில் உள்ள புகாரை பரீசலித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம்...என்றும் கூறியுள்ளார்.

எழ்வு வீட்டில்..சுருட்டும் வரை சுருட்டிக் கொண்டு போகலாம்..என்னும் உறவு போல செயல்படாமல்....கலைஞரின் பொறுப்பான அறிக்கைகள் மனத்தை மகிழ்விக்கின்றன.

ஆளும் கட்சியும்..திமுகவின் சமிபத்திய நிலைப்பாடை உணர்ந்து இணக்கமாய் செயல்பட்டால்...

தமிழன் மகிழ்வான்...ஒன்று பட்டால் எதையும் சாதிக்கலாம்...

5 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உண்மை.

கும்மாச்சி said...

உண்மையான கருத்து, தவறுகள் இரு பக்கத்திலும் உள்ளன.

கலைஞர் பேச்சில் இப்பொழுது யதார்த்தம் தெரிகிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கும்மாச்சி

Prakash said...

எதோ ஒரு உணவு பொருளை ஜெயா சாப்பிட்டார் என்று எழுதியதற்கே இந்த பொங்கு பொங்கும் நடுநிலை வியாதிகள், கனிமொழி மற்றும் ராசா குறித்து அருவருப்பாகவும், ஆபாச தொனியிலும் செய்திகளை கிசுகிசு பாணியில் தினமலம், ரிபோர்ட்டர் , ஜுவி போன்றவை செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டபோது, இந்த பத்திரிகைகளை கேள்வி கேட்காமல், நடுநிலை வியாதிகள் வாயில் என்ன சாப்பிட்டு கொண்டிருந்தனர் ????
அது என்ன பத்திரிகை சுதந்திரம், தனி நபர் தாக்குதல்.. கலைஞர் பத்தி தினமலர், தினமணி எழுதும் போதும்,சோ எழுதும்போதும் இனிக்குது... தனிநபர் தாக்குதலா தெரியல.. ஆனா ஜெயலலிதாவ பத்தி எழுதினா மட்டும் தனிப்பட்ட வாழ்கைய தாக்கி எழுத கூடாதுன்னு சொல்லுறது.. இந்த நடுநிலைமை தான் எனக்கு புரியல.