Tuesday, February 7, 2012

இந்த வாரம் பாக்யாவில் பாக்கியராஜ் பதில்....




சிக்கனம் என்பது வேறு..கஞ்சத்தனம் என்பது வேறு..

ஒருவன் தன் வருவாய்க்குள் செலவு செய்து...அதில் மாதம் தோறும் சற்று மிச்சப்படுத்தி எதிர்காலத்திற்கு சேமிப்பாயின் அது சிக்கனமாய் இருந்து வாழில் மேம்பட உதவும்.

அதுவே..ஒருவன்..வாழ்க்கையில் செலவு செய்ய வேண்டியதற்குக் கூட செலவு செய்யது..பணத்தாசைக் கொண்டு திரிவானேயாயின்..அவன் உடல் நலம் கெடுவதோடு..ஒருநாள் சேர்த்த பணத்தையும் இழப்பான்.இது அவன் கஞ்சத்தனத்திற்கு கிடைத்த தண்டனையாய் அமையும்.

இனி பாக்கிராஜ் ..தனது பத்திரிகையில் ஒரு கேள்விக்கு தந்த பதில் என்ன தெரியுமா?

கேள்வி - சிக்கனம் சோறு போடுமா?

பாக்கியராஜ் பதில் - சிக்கனம் என்பது ஒரு நல்ல குணம்.எல்லோராலும் அப்பழக்கத்தைக் கடைப் பிடிக்க முடியறதில்ல. ஆனா அதனால எவ்வளவு நன்மை இருக்குங்கறதுக்கு ஒரு உதாரணம்...

ஒரு பெரிய நிறுவனத்தோட முதலாளி முடி வெட்டிக் கொள்வதற்காக சலூன் கடைக்கு வந்தார்.அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார்.முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது.

ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒரே ஒரு ரூபாய்தான் இனாம் தருவதா அப்படிங்கற ஏளனத்தோட, 'உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட ஐந்து ரூபாய் இனாம் கொடுப்பார்கள்.ஆனால் நீங்கள்னு ' சிரிக்க...

அதுக்கு அந்த பணக்கார முதலாளி, 'உண்மைதான்.அதனால்தான் ஆயுள் முழுதும் அவர்கள் கணக்கர்களாகவே இருக்கிறார்கள்.நான் முதலாளியாய் இருக்கிறேன்' ன்னுட்டு சிரிச்சுக்கிட்டே நகர்ந்தார்.


2 comments:

Yaathoramani.blogspot.com said...

சிறிய பதில் ஆயினும்
அதிகம் உணர்த்திப் போகும் பதில்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

aotspr said...

வாழ்வின் அவசியமான பதில் ..

"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"