Sunday, February 26, 2012

எம்.பி.க்கள் கொள்ளையர்கள்- கொலைகாரர்கள்:



நாடாளுமன்ற உறுப்பினர்களை கொள்ளையர்கள் என்றும் கொலைகாரர்கள் என்றும் விமர்சித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவால்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புக் குழுவினரும் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியை அடுத்த காஜியாபாதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதுதான் இப்போது சர்ச்சைகளை சிறகடிக்க வைத்திருக்கிறது.

காசியாபாத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது:

இப்போதைய நாடாளுமன்றத்தில் 163 உறுப்பினர்கள் மீது பல தரப்பட்ட குற்றங்களுக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தது முதல், கொள்ளை, கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் வரை இந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்கும்போது ஊழலை ஒழிக்கும் வலுவான லோக்பால் சட்டத்தை இவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று எப்படி நம்புவது? வறுமையிலிருந்தும் ஊழலிலிருந்தும் நமக்கு எவ்வாறு விடிவு கிடைக்கும் என்பதுதான் கெஜ்ரிவாலின் பேச்சு.

 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரிந்து கட்டிக் கொண்டு கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

No comments: