Friday, October 26, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் பார்வை -2 (பகுதி 2)



சேகரின், "நாடகப்பிரியா" வின் முதல் நாடகத்தை பிரபல் situation comedy king என்று அழைக்கப்பட்ட கே கே ராமன் எழுதினார் .நாடகம் "கண்ணாமூச்சி:"

 கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்
ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது
ஒன் மோர் எக்சார்சிஸ்ட்  ஆகிய நாடகங்களை கிரேசி மோகன் எழுதினார். இவரால் அறிமுகமானமோகன் இந்நாடகங்களுக்குப் பின்னரே கிரேசி மோகன் என அழைக்கப்பட்டார் என்பது இங்கு பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று

சோ அவர்களின் "சாதல் இல்லையேல் காதல்" நாடகப்பிரியா அரங்கேற்றியது.

தவிர்த்து "மகாபாரதத்தில் மங்காத்தா" "காதுல பூ" காட்டில மழை" "1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி' "எல்லாமே தமாஷ்தான்" "அதிர்ஷ்டக்காரன்" "யாமிருக்க பயமேன்" பெரிய தம்பி, "சி எம்..பி எம்" (இந்நாடகமே ஹனிமூன் இன் ஹைதராபாத் என மீண்டும் அரங்கேறியது) தத்துப்பிள்ளை,"அல்வா" ஆகிய நாடகங்கள் மக்களை மகிழ்வித்த சில.

இவர் நாடகங்களை இவரைத் தவிர்த்து..வெங்கட், ஜிகே, கோபு பாபு ஆகியோரும் எழுதியுள்ளனர்

சபாக்களின் "வசூல் சக்கரவர்த்தி" என்ற பட்டமும் சேகருக்கு உண்டு

அதிர்ஷ்டக்காரன் என்ற நாடகம் கிருஷ்ண கிருஷ்ணா என்ற பெயரில் திரைப்படமானது.

வறுமையின் நிறம் சிவப்பு , நினைத்தாலே இனிக்கும் படங்கள் மூலம் இயக்குநர் கே பாலசந்தர் இவரை வெள்ளித்திரை நடிகனாக்கினார்.

விசுவின் இயக்கத்தில் 15 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தொலைக்காட்சிக்கான இவரது நாடகங்கள் வண்ணக்கோலங்கள் பாகம்-1, பாகம் -2, நம் குடும்பம், டேக்சி ஆகியவை

மத்திய அரசு தணிக்கைக் குழுவின் உறுப்பினராகவும் சில காலம் இவரை நியமித்தது

இவரது சில நாடகங்கள் ஆடியோ வடிவிலும், யூ டியூபிலும் கிடைக்கிறது

இவரது நாடகங்களை நூல் வடிவில் அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகர்களுக்காக ஒரு சங்கத்தை வாத்தியார் ராமனுடன் இணைந்து உருவாக்கியவர் இவர்.இன்று அந்த சங்கத்தின் தலைவராக காத்தாடியும், செயலராக தம்பி பார்த்தசாரதியும் உள்ளனர்

இவற்றையெல்லாம் தவிர்த்து..விளம்பரமே இல்லாமல் சேகர்..பல மாணவர்களுக்கு ஆண்டு தோறும் கல்லூரி கட்டிணம் செலுத்தி வருகிறார்.

பல ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறார்.

அவரும் , நாடகப்பிரியாவும் நீண்ட காலம் கலைச்சேவையும், சமூக சேவையும் செய்ய வாழ்த்துவோம்

(அடுத்த பதிவு அடுத்தவீட்டு ஜன்னல் பார்வை-3 தொடரும்)

(இப்பதிவிற்கு சம்மந்தமில்லா கமென்டுகள் நீக்கப்படும்)

No comments: