Tuesday, October 30, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 4 (பகுதி -2)



------------------------------
கே எஸ் நாகராஜன்
______________________

பின்னர் கலாநிலையம் சார்பில் கிட்டத்தட்ட  70 நாடகங்களை நாகராஜன் மேடையேற்றினார்.இவரது "குறிஞ்சி மலர்" (நா.பார்த்தசாரதி எழுதியது) நாடகத்தில் 113 கலைஞர்கள் நடித்தது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

அனுராதா ரமணனின் இம்சைகள் என்ற நாடகம்,
கல்கிதாசனின் "அம்பிகையின் கல்யாணம்" நாடகம் இவர்களின் வெற்றி நாடகங்களாகும்.

பல பிரபலங்களின் நாவல்கள், சிறுகதைகளை மேடைநாடகமாக்கி மேடையேற்றிய  குழு கலாநிலையம் என்றால் மிகையல்ல.

இவர்கள் மேடையேற்றிய ஹனிமூன் இன் ஹைதராபாத் என்ற நாடகத்தியே பின்ன எஸ் வி சேகர் வாங்கி சின்ன மாப்பிள்ளை/பெரிய மாப்பிள்ளிய எனும் நாடகமாக்கினார்.

1996க்குப் பிறகு நாகராஜனின் மகன் கே எஸ் என் சுந்தர் கலாநிலையம் பொறுப்பினை ஏற்றார்

சுந்தர், 1958ஆம் ஆண்டே ,அவருக்கு பத்து வயதாய் இருந்த போதே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.தேவனின் துப்பறியும் சாம்பு நாடகத்தை நடராஜன் போட்டபோது அவர் சாம்புவாய் நடிக்க, சுந்தர் சாம்புவின் மகன் சுந்துவாய் நடித்தார்.

சுந்தர் கலாநிலையத்திற்காக எழுதியுள்ள சில நாடகங்கள், "காதல் கல்யாண வைபோகமே", வி ஆர் எஸ் ஸோ வி ஆர் எஸ், ஆயிரம் காலத்துப் பயிர், யார் பையன், அனுபவ ஆராதனை.

தவிர்த்து வேறு சில குழுக்களுக்கும் இவர் நாடகங்கள் எழுதிக் கொடுத்துள்ளார்.

கே எஸ் நாகராஜன் அவர்களின் நூறு வயது பூர்த்தியானதை  சென்னையில் சபாக்களும், நாடகக் கலைஞர்களும் பிரம்மாண்டமாய்க் கொண்டாடினர்.இன்றும் அவர் தன் 106 வயதிலும் நாடகங்களில் ஆரவ்ம் காட்டி வருவருவது எந்த ஒரு கலைஞனுக்கும் கிடைக்காத வாய்ப்பு இது.

இந்த நேரத்தில் மற்றொன்றும் கூற ஆசைப்படுகிறேன்.1973ல் நான் எழுதி மேடையேறிய "தேவை ஒரு மாப்பிள்ளை" எனும் என் முதல் நாடகத்தில் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் குடியிருந்த அவர் வீடு தேடிச் சென்று வாய்ஸ்த்துக் காட்டி..அவர் சொன்ன மாற்ரங்களை செய்து மேடையேற்றினேன்.நான் நாடக ஆசிரியராய் ஆக பிள்ளையார் சுழி அவர்தான்.

No comments: