Sunday, October 28, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 3 (பகுதி-1)



பேங்க் ஆஃப் இந்தியாவில் பணி புரிந்த வந்த ஸ்ரீனிவாசன் (சீனா) என்பவரின் கிரியேட்டிவ் எண்டெர்டைனெர்ஸ் குழுவில் , "என் கேள்விக்கு என்ன பதில்" நாடகம் மூலம் மகேந்திரன் இயக்கத்தில் அறிமுகம் ஆனார் வரதராஜன்
அடுத்து யூ ஏ ஏ குழுவிற்காக "தேடினேன் வந்த்து" என்ற வெங்கட் நாடகம் மூலம் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.
பின்னர் கிரியேட்டிவ் என்டெர்னெயினர்ஸ் குழு மேடையேற்றிய "கிரேசி" மோகன் எழுதிய "36 பீரங்கி லேன்". வேதம் புதிது கண்ணன் எழுதிய "சொல்லடி சிவ சக்தி""அவனுடைய செல்லம்மா" ஆகிய நாடகங்களில் நடித்தார்.
தமிழ்நாடகமேடையேறிய அதே காலகட்டத்திலேயெ டிவியிலும் நுழைந்தார்
1977 தொடங்கி 1996 வரை சென்னைத் தொலைக்காட்சியிலும் பின்னர் எட்டு ஆண்டுகள் சன், விஜய்,ராஜ் போன்ற தனியார் தொலைக்காட்சிகளிலும் பணி புரிந்தார்
1986 முதல் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.1994 முதல் இயக்குநர் சிகரம் கே பாலசந்தரின் தொடர்ந்து நடித்து..தன் நடிப்புத் திறமையில் சிகரத்தைத் தொட்டார்.இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து 40 ஆண்டுகளாக டிவியில் தோன்றிவருவதால் டிவி வரதராஜன் என அனைவராலும் அறியப்பட்டவர் ஆனார்.
மேடை நாடகங்களில் தணியாப் பற்றுக் கொண்ட இவர் 1994ல் யுனைடெட் விசுவல்ஸ் என்ற குழுவினைத் தொடங்கினார்.
அக்குழுப் பற்றியும்,அதன் சாதனைகள் பற்றியும் அடுத்த பகுதியில்

No comments: