Tuesday, October 23, 2018

அடுத்த வீட்டு ஜன்னல் பார்வை - 1 (பகுதி -2)



(காத்தாடி ராமமூர்த்தி...தொடர்ச்சி)

1965ஆம் ஆண்டில் ஒருநாள், நண்பர்கள் சிவாஜி சதுர்வேதி,T D சுந்தரராஜன்,Bobby ரகுநாதன் ஆகியோருடன் இணைந்து ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் என்ற நாடகக் குழுவினைத் தொடங்கினார் காத்தாடி.

தி ஹிந்து பத்திரிகையில் வேலை செய்து வந்த கோதண்டராமன் என்பவர் நண்பர் ஒருவர் மூலம் காத்தாடிக்கு அறிமுகமானார்.

அந்த கோதண்டராமன்தான் , அனைவராலும் பின்னாளில் அறியப்பட்ட situation comedy மன்னன் கே கே ராமன் ஆவார்.அவர் ஸ்டேஜ் கிரியேஷன்ஸிற்காக ஒரு நகைச்சுவை நாடகத்தை எழுதிக் கொடுத்தார்.அந்நாடகம் "இணையில்லா ஜோடிகள்" (Matchless Matches)

மாபெரும் வெற்றி நாடகமாக அது அமைய, பின்னர் அவர் எழுத்தில், "Good bye to Love", Runaway Husband" படி தாண்டிய பதி ஆகிய நாடகங்களை ராமமூர்த்தி அரங்கேற்றினார்.

இந்நிலையில் விசுவின் நட்பு கிடைக்க..காத்தாடியின் குழுவிற்கு விசு நாடகங்கள் எழுதினார்.முதல் நாடகம் "டௌரி கல்யாண வைபோகமே".விசு இயக்கிய முதல் நாடகமும் இதுதான்.அடுத்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இருவர் சாம்ராஜ்ஜியம்தான்.

:சிரித்துக் கொண்டே அழுகின்றேன்", சத்தியவான் சாவித்திரி", "பட்டினப்பிரவேசம்" ஆகியவை சில முக்கியமான நாடகங்களாகும்.

பட்டினப்பிரவேசம் நாடகத்தை இயக்குநர் கே பாலசந்தர் பலமுறை சென்று பார்த்தார்.பின்னர் அதை திரைப்படமாக்க எண்ணினார்.

இந்நாடகத்தில் தான் டில்லி கணேசன் நாடக உலகிற்கு அறிமுகமானார்.அவர் மேடையில் ஏற்ற வேடத்தையே திரைப்படத்திலும் அவருக்கு அளித்தார் கேபி.தவிர்த்து அந்நாடகத்தில் இன்னசெண்ட் தண்டபாணியாக நடித்த காத்தாடியும் திரையில் அவ்வேடத்தை ஏற்றார்

பின்னர் காத்தாடி குழுவினருக்காக கிரேசி மோகன் அய்யா அம்மா அம்மம்மா என்ற நாடகத்தை எழுதினார்.

இந்நிலையில் திருவல்லிக்கேணியில் வசித்து வந்த நாடக உலக ஜாம்பவான்களில் ஒருவரான நடராஜன் , காத்தாடியை தொலைபேசியில் அழைத்தார்.

இந்த நடராஜன் , தேவரின் "துப்பறியும் சாம்பு" கதையை நாடகமாக்கி புகழ் பெற்றவர்.மக்களால் "சாம்பு" நடராஜ ஐயர் என ஆழைக்கப்பட்டவர்.அவர் தொலைபேசியில் காத்தாடியிடம் "சாம்பு நாடகத்தை மீண்டும் நடத்த இருப்பதாகவும், மூப்பின் காரணமாக தான் நடிக்க முடியாது என்றும், சாம்பு வேடத்தை காத்தாடி நடத்தித் தர வேண்டும்" என்றும் கூறினார்.

காத்தாடியும் சம்மதித்தார்.நாடகம் நடந்து முடிந்த அன்று நடராஜ ஐயர், காத்தாடியை அன்புடன் அணைத்து, "என்னை விட அருமையாக அப்பாத்திரத்தில் நடித்தாய்" என பாராட்டினார்

பின்னர் அந்த சாம்புவின் மைந்தனாக "Son of Sambu"என்ற நாடகத்திலும் காத்தாடி நடித்து பாராட்டினைப் பெற்றார்.

(ஜன்னல் பார்வை 1 மேலும் தொடரும்)

No comments: